search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய்.
    • தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி தலைமை அஞ்சல் நிலையத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, தருமபுரி எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், தருமபுரி பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில் தலைமையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் பாரதிசானுக்கு மனு எழுதி தபால் அனுப்பினார்கள்.

    அப்போது, முன்னாள் எம்.பி., செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு நல்ல அரசு என்பது மக்களின் தேவையை அறிந்து செய்ய வேண்டும். ஆனால், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பல முறை தி.மு.க., அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதை நிறைவேற்றாமல் உள்ளது.

    தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய். ஒரு சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாத இந்த அரசு எப்படி சமூக நீதிக்கான அரசாக இருக்க முடியும். பெரியார் மண் என்று எப்படி சொல்லாம். தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு சங்க நிர்வாகி குமரன், தருமபுரி பா.ம.க., நகர செயலாளர்கள் வெங்கடேஷன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் குமரன், ஜெய்கணேஷ் உட்பட, பலர் உடன் இருந்தனர்.

    • கீழ்பவானி பாசன திட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 70 ஆண்டுகால இந்த திட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சண்முகராஜ் மற்றும் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருளாளர் செங்கோட்டு வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கீழ்பவானி பாசன திட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது. 70 ஆண்டுகால இந்த திட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு வேலை தொடங்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெறாமல் முடக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

    சீரமைப்பு வேலைகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022-23) மட்டும் நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதம் தண்ணீர் இடைநிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். இந்த சீரமைப்பு வேலைகளை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை வருகிற மே மாதம் 1-ந் தேதி தொடங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.1-ந் தேதி எந்தவித காலதாமதம் செய்யாமல் கால்வாய் சீரமைப்பு வேலைகளை தொடங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து மனு அளித்த சங்க நிர்வாகிகள் கூறும்போது, வருகிற 1-ந் தேதி கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவதுடன் 5-ந் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.

    • கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
    • கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால், டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டாததால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து மறியி லில் ஈடுபட்டதோடு, உடனடியாக இடம் மாற்றம் செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புசெழியன், டாஸ்மாக் மேலாளர் குப்பு சாமி, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டுமென, அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால், 2 மணி நேரம் நீடித்த பொதுமக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஓரிரு மாதங்களில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    பூச்செடிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள அரண்மனைக்கொல்லை மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.அரண்மனைக் கொல்லைய சேர்ந்தவர் சண்முகவடிவேல் (வயது 45). விவசாயியான இவரும், இவரது தம்பி செந்தில் வடிவேலும், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூ செடிகள் நட்டு பூ மகசூல் செய்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் உள்பட சிலர் மல்லிகை, முல்லை பூ செடிகளை அரிவாள் கொண்டு வெட்டி சேதப்ப டுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட் பூச்செடிகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.பூச்செடிகளை வெட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீரமங்கலம் காவல் நிலையத்தில்சண்மு கவடிவேல் புகார்கொடு த்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சண்முகவடிவேலும், அவரது உறவினர்களும், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமார், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வடகாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம அலுவலர் தனலட்சுமி ஆகிேயார மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.திடீர் மறியல் போரா ட்டத்தால், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இது தொடர்பாக கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கழநீர் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவருடன் உறவினர்கள் 11 பேரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களுக்கு பொது கண்மாயில் குளிக்கவும், குடிநீர் குழாயை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாம். இதுகுறித்து சிக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 11 பேரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன
    • காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் மேற்கூரை அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம் மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது சந்தையின் ஒரு புறத்தில் இருந்த பொருட்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினார்கள்.

    மறுபுறத்தில் இருந்த பொருட்களை மாற்றவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் முதலில் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு செட் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு கடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். ஆனால் வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டு வந்திருந்த ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் தரப்பில் நாங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரையின் கீழ் பொருட்கள் எதுவும் வைக்க மாட்டோம். அப்படி பொருட்கள் எதுவும் வைத்தால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை எடுத்து செல்லுங்கள் ஆனால் மேற்கூரைகளை அகற்றக்கூடாது என்று கூறினார்கள்.

    இதையடுத்து அதிகாரிகள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மேற் கூரைகளை அகற்றாமல் சென்றனர்.தொடர்ந்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், "ஏற்கனவே கொரோனா காலத்துக்கு பிறகு நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கூரைகளை அகற்றுவது எங்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும். நாங்கள் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து மேற் கூரைகளை அமைத்துள்ளோம். மேற்கூரைகளை அகற்றுவதால் காய்கறிகள் வெயிலில் நாசமாகி விடும். எனவே இதை அகற்ற கூடாது" என்று தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.

    • குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
    • இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஊராட்சி பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வண்ணங்கள் பூசும் பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு தராமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதை கண்டித்து திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இது தொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக அக்னிபத் திட்டம் உள்ளது.
    • ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்கிற 4 ஆண்டு பணிப்புரியும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில் பணியில் சேரலாம். 4 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ராணுவத்திற்கு இளைஞர்கள் செல்கின்றனர்.ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ×