search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு"

    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×