search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மாயம்"

    • இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள யாரப் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகில் (21). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டில் இருந்து நமாஸ் செய்ய சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரிகா மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் முருகன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சரிகா (வயது 22). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்திலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    சரிகா, நவீன்குமாரை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன்புதூர் பகுதியில் அவரது தந்தை மாரிமுத்து வீட்டில் தனது குழந்தையுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிகா தனது அக்கா மகனை பார்த்து வருவதாக கூறிவிட்டு தன் மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாரிமுத்து அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • டைப் ரைட்டர் பயிற்சி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.
    • விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த பெரும்பாலை கொண்டம்பட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் தில்லைகரசி (வயது19).

    இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதேபகுதியில் உள்ள டைப் ரைட்டர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார் இந்த நிலையில் நேற்று டைப் ரைட்டர் பயிற்சிக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.

    இதனால் பதறிப்போன பெற்றோர்கள் தில்லைக்கரசியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தந்தை மாரிமுத்து பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் போகனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் பிரவீனா (வயது19). இவர் பெரியம்பட்டியில் உள்ள விடுதியில் தங்கி அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பி வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் அவர் கிடைக்காததால் மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாதையன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    • சம்பவத்தன்று இவருக்கு அவரது மாமியாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனவிரக்தியில் இருந்த சத்யா நேற்று வீட்டை விட்டு மாயமானார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணிய சிவா. இவரது மனைவி சத்யா (வயது33). சம்பவத்தன்று இவருக்கு அவரது மாமியாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவிரக்தியில் இருந்த சத்யா நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கணவர் சுப்ரமணியசிவா, தனது மனைவி பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், சத்யா மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் திருவாக்க வுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது
    • உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் ஆகி விட்டது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பரசேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாகம்பிள்ளை (வயது 57). களியங்காட்டில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி உஷாபிள்ளை (50). இவருக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவ ருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.அந்த நபர் உஷா பிள்ளைக்கு லண்டனில் நல்ல வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது.

    இதனை நம்பிய உஷாபிள்ளை யாரிடமும் சொல்லாமல் நேற்று முன்தினம் லண்டன் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அதன்பின்பு அவரை காணவில்லை.

    இதனால் பதறி போன உஷா பிள்ளையின் கணவர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது நேற்று காலை 9.30 மணி அளவில் செல்போனில் உஷாபிள்ளை கணவரை தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பின்னர் உஷாபிள்ளை மகளின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார்.

    அந்த பெண், டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து பேசுகிறோம். உங்கள் தாயார் நாங்கள் கூறியது போல் ரூ.1 லட்சம் பணம் கொண்டு வரவில்லை. அவர்கள் பணம் கட்ட வில்லை என்றால் அவர்களை வேறு நாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம் என கூறியுள்ளார்.

    உடனே உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. இதுகுறித்து நாகம் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தின்னூர் லட்சுமி நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி கவிதா (44). குடும்ப தகராறு காரணமாக நேற்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது.
    • சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    நடுவீரப்பட்டு அடுத்த எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மணிகண்டன் செல்வராணியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கருத்து வேறுபாட்டால் கடந்த ஐந்து வருடமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
    • 24-ந்தேதி வீட்டை விட்டு சென்ற பவித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள பாலக்கோடு வெலாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது சகோதரி பவித்ரா (வயது 31).

    இவருக்கும் கடமடை பகுதியை சேர்ந்த மத்திய போலீஸ் படை வீரர் பெருமாள் என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து. ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஐந்து வருடமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி வீட்டை விட்டு சென்ற பவித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தம்பி ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரமேஸ்வரி (வயது 20). திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார்.இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காவில்லை
    • இவரின் தாய் போலீசில் புகார் கொடுத்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அன்னகாரன்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பரமேஸ்வரி (வயது 20). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேந்தநாட்டைச் சேர்ந்த கணேசனுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. பரமேஸ்வரிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது பரமேஸ்வரியின் கணவர் திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார். இதனால் பரமேஸ்வரி தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    கடந்த 27ம் தேதி 6 மணிக்கு வீட்டில் இருந்தர் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால்ப ரமேஸ்வரியின் தாய் விஜயலட்சுமி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்தார். இதில் விசூர், மேற்கு தெரு முத்துவேல் (25) ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    • இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
    • அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
    • தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை

    கடலூர்:

    சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×