search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையுடன்"

    • சரிகா மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் முருகன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சரிகா (வயது 22). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்திலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    சரிகா, நவீன்குமாரை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன்புதூர் பகுதியில் அவரது தந்தை மாரிமுத்து வீட்டில் தனது குழந்தையுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிகா தனது அக்கா மகனை பார்த்து வருவதாக கூறிவிட்டு தன் மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாரிமுத்து அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியில் தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா?

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வசந்தன் (வயது 29). இவர் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(27). இவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு சமீத் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். சமீத்தை சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சுபஸ்ரீ விட்டுள்ளார். அங்கு சுப பெற்றோர்கள் அவனை கவனித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி காலை சுபஸ்ரீ, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக மகள் சஞ்சனாவுடன் பஸ்சில் ஏறி சென்றுள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு போய் சேரவில்லை. அதேபோல் விளங்காட்டுபுதூரில் உள்ள கணவன் வீட்டிற்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தன், உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுபஸ்ரீ மற்றும் குழந்தையை தேடி பார்த்தனர்.

    ஆனால் சுபஸ்ரீ, குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வசந்தன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர்

    வழக்கு பதிவு செய்து, குழந்தை

    யுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா? அல்லது

    அவர்களை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.

    • இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

    ×