search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young woman with child"

    • பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியில் தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா?

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வசந்தன் (வயது 29). இவர் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(27). இவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு சமீத் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். சமீத்தை சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சுபஸ்ரீ விட்டுள்ளார். அங்கு சுப பெற்றோர்கள் அவனை கவனித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி காலை சுபஸ்ரீ, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக மகள் சஞ்சனாவுடன் பஸ்சில் ஏறி சென்றுள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு போய் சேரவில்லை. அதேபோல் விளங்காட்டுபுதூரில் உள்ள கணவன் வீட்டிற்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தன், உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுபஸ்ரீ மற்றும் குழந்தையை தேடி பார்த்தனர்.

    ஆனால் சுபஸ்ரீ, குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வசந்தன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர்

    வழக்கு பதிவு செய்து, குழந்தை

    யுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா? அல்லது

    அவர்களை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×