search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child magic"

    • சரிகா மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் முருகன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சரிகா (வயது 22). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்திலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    சரிகா, நவீன்குமாரை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன்புதூர் பகுதியில் அவரது தந்தை மாரிமுத்து வீட்டில் தனது குழந்தையுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிகா தனது அக்கா மகனை பார்த்து வருவதாக கூறிவிட்டு தன் மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாரிமுத்து அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

    ×