search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தற்கொலை"

    • கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
    • ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர்:

    ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கவிதா (23). இவர்கள் கடந்த 10.10.2022 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கவிதாவை அவரது தாத்தா வீட்டில் முகமது விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா தனது கணவருடன் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா, நேற்று முன்தினம் பத்தலப்பள்ளியில் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதே போல திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகராணி (வயது33), இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராணி நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நாகராணியிடம் கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் கேட்டும், குழந்தை இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி நாகராணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமார்50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பந்த்பபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நாகராணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதுகுறித்து நாகராணியின் தாய் மேனகா செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து நாகராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்த வர் பாலம்மாள் (40). இவர் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். சில வருட ங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பால ம்மாள் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார். இதுகுறித்து உத்தம பாளையம் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பில்லாந்தியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 35).இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 2 வருடமாக சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

    இதைக் கண்ட சுதாவின் தாயார் அவரை மீட்டு நாவல் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாற்றப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுதாவின் தந்தை பெரணமல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களது மூத்த மகள் தீபிகா (வயது18).இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை கண்ட தாய் அவரை கண்டித்தார். இதில் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த தீபிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகள் ராசாத்தி (வயது 22).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் .

    இந்நிலையில் நேற்று காலை கட்டளைபாட்டை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் விசாரணையில் மாயமான துரைராஜ் மகள் ராசாத்தி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இளம் பெண்ணின் தந்தை துரைராஜ் நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டிலைலா (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    அருளுக்கும் டிலைலாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் நீ வேண்டுமானால் உன்னுடைய தாய் வீட்டுக்கு போ என்று மனைவி டிலைலாவிடம் சொல்லிவிட்டு அருள் பள்ளிகூடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அருள் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் டிலைலா தூக்கு போட்டதாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த அவரது மகள் தந்தை அருளிடம் வந்து கூறினார். உடனடியாக அறைக்குள் சென்று தூக்கில் தொங்கிய டிலைலாவை கீழே இறக்கி உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து உத்திரமேரூர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்தவர் அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார்.
    • கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டிைய சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வி(48). இவர்கள் 2 பேரும் அதேபகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த செல்வி அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சந்தபேட்டை பகுதி யைச் சேர்ந்தவர் சின்னதுரை, லாரி டிரைவர். இவரது மனைவி சத்தியா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியா வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.
    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). இவருக்கு மூன்று3 மகள்கள் உள்ளனர்.

    இவரது மூத்த மகள் நந்தினி (22) என்பவரை அந்தியூர் குழியூரை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கடந்த 6 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

    குப்புசாமி, நந்தினிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேவராஜ் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.
    • காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் தண்ணீர் பந்தல் பாளையத்தை சோ்ந்தவர் பழனிச்சாமி (38). மில் தொழிலாளி. இவரது மனைவி செல்வி என்கிற ராதா (35). மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்.

    ராதா அவரது குழுவில் கடன் பெற சிலருக்கு ஜாமீன் கையெழுத் திட்டுள்ளார். அவர்கள் கடன் பெற்று முறையாக செலுத்தவில்லை. இதனால் ஜாமீன் கையெழுத்திட்ட அவர் பெற்ற கடன் தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதில் மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலை முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×