என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
- தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களது மூத்த மகள் தீபிகா (வயது18).இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை கண்ட தாய் அவரை கண்டித்தார். இதில் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த தீபிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






