search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை
    X

    கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை

    • வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகள் ராசாத்தி (வயது 22).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் .

    இந்நிலையில் நேற்று காலை கட்டளைபாட்டை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் விசாரணையில் மாயமான துரைராஜ் மகள் ராசாத்தி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இளம் பெண்ணின் தந்தை துரைராஜ் நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×