search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகராணி (வயது33), இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராணி நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நாகராணியிடம் கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் கேட்டும், குழந்தை இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி நாகராணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமார்50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பந்த்பபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நாகராணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதுகுறித்து நாகராணியின் தாய் மேனகா செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து நாகராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    Next Story
    ×