search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜை"

    புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் அருகில் பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் ரூபா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள்,தி.மு.க. பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கின
    • சேரங்கோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரெப்கோ வங்கியின் உதவியுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கபட்டது.

    நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி தலைவர், துணை தலைவர், பொதுமக்கள், வியாபார சங்க உறுப்பினர்கள், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நீலகிரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    • வேலாயுதம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது
    • முருகனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி முதல் நாளை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதே போல புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
    • கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.

    "பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி

    கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி

    நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

    இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
    • குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன.

    வாசல்படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்.

    பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.

    குத்து விளக்கு

    குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    இதன் அடிப்பாகம் பிரம்மா, தண்டு பாகம் விஷ்ணுவையும், தகழி சிவனையும்,

    திருவிளக்கின் ஐந்து முகம் பஞ்ச பூதங்களையும், எண்ண நாத தத்துவத்தையும்,

    குடம் லட்சுமியையும், ஒளி சரஸ்வதியையும், ஒளியால் பிறக்கின்ற சூடு சக்தியையும் குறிக்கும்.

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
    • குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

    எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

    அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    • ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்.
    • ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் சூரிய சந்திரர்கள் ஒன்று சேருகின்ற அமாவாசையன்றும்,

    நேர் எதிரே சந்திக்கின்ற பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி

    பூஜை செய்ய வேண்டும்.

    அதனால் ஏற்படும் பலன்களாவன:-

    சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்

    வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்

    ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்

    ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்

    ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்

    புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்

    ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்

    கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்

    மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்

    தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்

    மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்

    பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை உண்டு பண்ணும்

    • மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
    • சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    நாம் அன்றாடம் காலையும் மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம்.

    தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும்,

    அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியுமா?

    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால்

    நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

    மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.

    கடன் தொல்லைகள் விலகும்.

    சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

    • புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 11-வது வார்டு மற்றும் 20-வது வார்டுக்கு உட்பட்ட அலைமகள் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் நந்தினி ராஜேஸ் , சுரேஷ் , வார்டு செயலாளர் விஜயகாந்த் ,நகர துணை செயலாளர் இம்ரான்கான் ,11-வது வார்டு அவைத் தலைவர் மணிவேல் , கட்சி நிர்வாகிகள் மனோகரன் , கலைச்செல்வி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை சிவன் கோவில்களில் சிவனுக்கு அன்னாபிஷேக் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்

    கந்தர்வகோட்டை,

    ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் பௌர்ணமி சாமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிவபெருமானை தரிசித்தனர். 

    ×