search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதின்"

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது
    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்து பேசப்படும் என எதிர்பார்ப்பு

    ரஷிய அதிபர் புதின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ''தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுத்துறை மந்திரி, புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புதின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்'' என்றார்.

    கடந்த புதன்கிழமை இரு தலைவர்கள் போன் மூலம் பேசிக்கொண்டனர். அப்போது புதின், துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.

    புதின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா இன்னும் நீட்டிக்காமல் உள்ளது. இதை நீட்டித்தால் துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியும்.

    ஜூலை 2022-ம் ஆண்டு துருக்கி, ஐக்கிய நாடுகள், உக்ரைனுடன் தானிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 17-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் ரஷியா ஒப்பந்தத்தை நீட்டிகக்வில்லை.

    • உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
    • போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார்.

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன் ரஷியாவை குறிவைத்தும் தாக்கத் தொடங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள், ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.

    'இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன. இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது' என்று புதின் குறிப்பிட்டார்.

    அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்" என்றார்.

    அதேசமயம் போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார். தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார் ஜெலன்ஸ்கி.

    • கைது நடவடிக்கை காரணமாக தென்ஆப்பிரிக்கா செல்வதை தவிர்த்து உள்ளார்
    • சீனாவை தொடர்ந்து துருக்கி நாட்டிற்கும் செல்ல இருக்கிறார்

    ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    'ஒன் பெல்ட், ஒன் ரோடு' ஆசியாவை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    சீனா பயணத்தை தொடர்ந்து துருக்கியும் செல்ல இருக்கிறார். அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் என யுஷாகோவ் தெரிவித்துள்ளார். துருக்கி ரஷியாவுக்கு ஆதரவு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20ஜி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா பயணத்தை அவர் தவிர்ப்பதாக இதுவரை தெரிவிக்காத நிலையில், பயணம் செய்வாரா? என்பது குறித்து இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை புதின் நிராகரித்துள்ளார். அவருக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு புதின் தனிப்பொறுப்பு என குற்றம்சாட்டி சர்வதேச கிரிமினல் கோர்ட் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சர்வதேச கிரிமினல் கோர்ட் ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா கையெழுத்திட்டுள்ளதால், அங்கு சென்றால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். இதனால் புதின் தென்ஆப்பிரிக்கா செல்லவில்லை.

    சீனா, துருக்கி, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் சீனா, துருக்கி செல்ல புதினுக்கு சிக்கல் ஏதும் இல்லை.

    சீன அதிபர் சில மாதங்களுக்கு முன் மாஸ்கோ சென்றிருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்- புதின் சந்திப்பு 2022-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டின்போது நடைபெற்றது. அதேபோல் 2022-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால விளையாட்டு தொடக்கவிழாவின் போது சந்தித்துக் கொண்டனர்.

    • ஒடேசாவை குறிவைத்து ரஷியா தொடர் தாக்குதல்
    • உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வி என்கிறார் ரஷிய அதிபர் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர்கள் பலியாவதும், கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் சேதமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ரஷியா தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள ஒரு மிக பெரிய கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தேவாலயம் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது.

    1794-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயமான டிரான்ஸ்ஃபிகரேஷன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதி என வர்ணிக்கப்பட்ட நகர வளாகத்திற்குள் இந்த தேவாலயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    1936-ல் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் இடிக்கப்பட்ட இந்த தேவாலயம், 1990-களில் சோவியத் ஒன்றியம் உடைந்த காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது.

    கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்திருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கெதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வியை கண்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலை போர் குற்றம் என கூறியிருக்கும் உக்ரைன், இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.

    இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

    ரஷியா இதற்கு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். உலக மக்கள் தீவிரவாத தாக்குதலை வழக்கமான சம்பவமாக பழகி கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. ரஷியாவின் இலக்கு நகரங்களோ, கிராமங்களோ அல்லது பொது மக்களோ இல்லை. மனிதகுலமும் ஐரோப்பிய கலாசாரமும்தான் அவர்களின் தாக்குதல் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    அதிக அளவில் சேதம் அடைந்த தேவாலயத்தின் இடிபாடுகளிலிருந்து மொசைக் துண்டுகள் பணியாட்களால் சுத்தம் செய்யப்படுவது அங்கிருந்து வெளிவரும் காட்சிகளில் தெரிந்தது. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என தெரிகிறது.

    சிலை சேதத்திற்குள்ளாகியிருக்கிறது. தேவாலயத்தின் மீது நேரடியாக நடைபெற்ற தாக்குதல் இது. மூன்று உயர்நிலைகள் சேதமடைந்திருக்கிறது என குறிப்பிட்ட பாதிரியார் ஒருவர் கூறியுள்ளார்.

    ரஷியாவிற்கெதிரான தீவிரவாத செயல்களுக்கான பயிற்சி கூடமாக இந்த தேவாலயம் இருந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது.

    ஆனால் அந்நகர சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷியா மறுப்பு
    • உக்ரைனில் இருந்து தானிய பொருட்கள் ஏற்றுமதி ஆவதில சிக்கல்

    உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.

    இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

    கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.

    ரஷியாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை உறுதி செய்ய பிற நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    தற்போது ரஷியாவால் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், எந்த கப்பல் நிறுவனமும் அதனை அலட்சியப்படுத்தி தானிய ஏற்றுமதியில் பங்கேற்காது என தெரிவிக்கும் வல்லுனர்கள், இந்த சிக்கல் உலகின் மிகப்பெரிய உணவு நெருக்கடியாக மாறுவதற்கு முன் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என கருத்து தெரித்தனர்.

    • உக்ரைனில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    • ரஷியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் கருங்கடல் ஒப்பந்தத்தில் பங்கேற்பதாக கூறி உள்ளது.

    கோதுமை, சோளம் உட்பட பல தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன.

    ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.

    இதனையடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷியாவுடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" (Black Sea Grain Deal) என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன்படி ஆயுதங்கள் ஏதும் இல்லையென பரிசோதித்து உறுதி செய்த பின் உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து தொடர்ந்து தானிய ஏற்றுமதி நடைபெறுவதற்கு ரஷியா சம்மதித்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் 2 முறை புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய கடைசி நாள். ஆனால், இம்முறை ரஷியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தது.

    இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

    ரஷியாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷியாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

    "கருங்கடல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இனி இதற்கு ரஷியா ஒத்துழைக்காது. ரஷியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன், ரஷியாவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கேற்கும்" என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

    இது வரை இந்த ஒப்பந்தம் மூலம் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும்.

    தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

    • அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது
    • எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம்

    உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷிய தாக்குதல் நடத்த தொடங்கியபோது, உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை.

    கடந்த வாரம் அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. அந்த வெடிகுண்டுகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

    கொத்து வெடிகுண்டுகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதை வழங்கியுள்ளது.

    இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில் ''எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினால், நிச்சயமாக பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார்.

    ரஷிய வீரர்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன உறுதி அளித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது
    • ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    லண்டனில் உள்ள ரஷிய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷிய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷிய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.

    ரஷிய ரெயில்வேத்துறை, புதின் பயணம் செய்யும் ரெயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து டோசியர் சென்டர் இந்த தகவல்களை பெற்றுள்ளது.

    அந்த ரெயிலின் விவரங்களில், பெட்டி எண் 021-78630 முக்கியத்துவம் பெறுகிறது. இது புதினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்து உயர்ரக வசதிகள் அடங்கியது.

    இதில் ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது. இந்த பெட்டி தயாரிக்கும் பணிகள் 2018-ல் நிறைவடைந்திருக்கிறது.

    உடற்பயிற்சிக்கான இத்தாலிய தயாரிப்பான டெக்னோஜிம் எடைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் இதில் முதலில் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர், அமெரிக்காவின் ஹாய்ஸ்ட் கருவிகளால் இவை மாற்றியமைக்கப்பட்டது.

    அந்த பெட்டியில் ஒரு முழு அழகுசாதன மையத்தில் மசாஜ் டேபிள் மற்றும் உடல் தோலின் இறுக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் உயர்ரக ரேடியோ அதிர்வெண் இயந்திரம் உட்பட அனைத்து விதமான சிறப்பு அழகு சாதனங்களும் இருக்கின்றன.

    உளவு பார்க்கும் மற்றும் ஒட்டுகேட்கும் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும் வகையில் அந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முழுவதுமாக சிறப்பான முறையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட ஒரு முழு துருக்கி நாட்டின் நீராவி குளியல் மற்றும் ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தான் கண்காணிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக புதின் ரெயில் பயணத்திற்கு அதிகளவில் திரும்பியுள்ளார் என ரஷியாவை விட்டு வெளியேறிய ரஷிய பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் முன்னாள் கேப்டனான கிளெப் கரகுலோவ் கூறுகிறார்.

    ரஷிய- உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குமிடையே உள்ள தொலைதூர ரஷிய பகுதியான வால்டாய் அருகே புதினின் ரெயில் கணிசமான நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    ஊழியர்கள் இந்த சிறப்பு ரெயிலுக்காக தனிமைப்படுத்தப்பட்டு வேலை செய்கின்றனர். ரெயில் புறப்படாமல் இருக்கலாம், ஆனால் பணியாட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என கரகுலோவ் கூறியுள்ளார்.

    மேம்பட்ட தகவல்தொடர்பு ஆண்டெனாவைக் குறிக்கும் ஒரு வெள்ளை டோம் புதினின் ரெயிலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டுதான் இந்த ரெயிலை அடையாளம் கண்டுகொள்கின்றனர். பிற ரெயில்களில் இது இருக்காது எனபது குறிப்பிடத்தக்கது.

    வாக்னர் அமைப்பின் கிளர்ச்சிக்கு பிறகு புதின் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ஆனால், அதற்கு இந்த ரெயிலை பயன்படுத்தினாரா? என்பது ஊர்ஜிதமாகவில்லை.

    • சவால்களை திறம்பட அடக்கிவிட்டதாக உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு புதினுக்கு முக்கியமானது.
    • வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார்.

    2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு நடந்தது. ஆனால், இந்த முறை, இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது.

    இரு வாரங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்திற்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கி விட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானது.

    இது குறித்து, வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குனர் மைக்கேல் கூகல்மேன் கூறும்போது, "இந்த கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்" என கூறியிருக்கிறார்.

    அதே போல் இது இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷிய உறவு வலுவாக இருந்து வருகிறது. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது. மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷியாவையே இந்தியா நம்பியுள்ளது.

    "ரேண்ட் கார்ப்பரேஷன்" (RAND Corporation) என்னும் அமெரிக்காவில் உள்ள லாபநோக்கமற்ற, அமைப்புசாரா பல்துறை சிந்தனை நிறுவனத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் கூறுகையில், "வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது" என கூறினார்.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வலுவான புதிய உறவுக்கான திட்டங்களில் கையெழுத்திட்டார். இப்பின்னணியில் இந்தியா, ரஷிய-சீனாவுடனான தனது உறவை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

    • யெவ்ஜெனி பிரிகோசின் பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
    • கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார்.

    மாஸ்கோ :

    உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்டது, வாக்னர் குழு என்ற கூலிப்படை. இதன் தலைவரான யெவ்ஜெனி பிரிகோசின், தங்கள் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டி அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்தார். அதேவேகத்தில் பின்வாங்கி, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.

    அவர் அண்டை நாடான பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்றதை பிரிகோசினோ, பெலாரஸ் அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில், ஒரு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு அமைப்பான பெலாரஸ்கி ஹாஜுன், பிரிகோசினின் ஜெட் விமானம், பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க் அருகே நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்துள்ளது.

    பிரிகோசின் நேற்று முன்தினம் வெளியிட்ட ஓர் ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார். ரஷிய ராணுவத்தை அவர் மீண்டும் விமர்சித்தபோதும், புதினுக்கு எதிராக தான் புரட்சி செய்ய முயலவில்லை என்று கூறினார்.

    அன்று இரவு தொலைக்காட்சியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரிகோசினின் பெயரை குறிப்பிடாமல், கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் கைப்பாவையாக செயல்பட்டதாக விமர்சித்தார். அதேநேரத்தில், பெரிய ரத்தக்களறியை தவிர்த்ததாக தனியார் படை வீரர்களை பாராட்டவும் செய்தார்.

    இதற்கிடையில், தனியார் படையின் கிளர்ச்சி குறித்த குற்றவியல் விசாரணையை ரத்து செய்வதாக ரஷிய அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.

    • கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
    • வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது.

    ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய ராணுவ தலைமைக்கும், அரசுக்கும் எதிராக வாக்னர் குழு திரும்பியது. தங்களது படை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.

    இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து வாக்னர் குழுவுக்குரிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டதாக அறிவித்தார். இதனால் வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

    கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள். துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள்.

    வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷியரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    நாட்டு மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷியாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    • வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதி.
    • கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி.

    வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    ×