search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபுதேவா"

    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • 'பஹீரா' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

     

    பஹீரா

    பஹீரா


    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பஹீரா' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகை மஞ்சு வாரியர் தற்போது நடித்து வரும் படம் 'ஆயிஷா'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' பாடல் வெளியாகி உள்ளது.

    'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது 'ஆயிஷா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கிறார்.

     

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    இந்நிலையில் 'ஆயிஷா' படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்த பாடலை பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.
    • இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்திற்கு 'காட்ஃபாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

    பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'காட்ஃபாதர்' படத்தின் பாடல் ஒன்று நிறைவுபெற்றுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு பிரபுதேவாவுடன் பணிபுரிந்தது என்ன ஒரு அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.



    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பஹீரா’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹீரா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

    பஹீரா

    பஹீரா

    இந்நிலையில் 'பஹீரா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், அதோடு சூப் பாய்ஸ்-களுக்கு இது தான் உண்மையான சுதந்திர தினம் என்றும் குறிப்பிட்டு போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளனர்.

    • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    பிரபுதேவா - சரத்குமார்

    பிரபுதேவா - சரத்குமார்

    அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

    • தமிழ் சினினாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபு தேவா ரேக்ளா, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் நடித்துள்ள படம் 'மைடியர் பூதம்'. இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

    மைடியர் பூதம்

    மைடியர் பூதம்


    டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் இருந்து 'எனக்கு மட்டும் ஏன் ஏன்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

    ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் இந்த கதாபாத்திரம், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.



    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவா, பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. 

    அவையெல்லாம் ஓய்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது. 

    பிரபுதேவா

    அவர் ஒரு பெண் மருத்துவர் என்றும், பரிசோதனை செய்யப்போனபோது, அவரிடம் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
    கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
    கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

    சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி. 

    கொல்லிமலை பகுதி

    இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
    எங் மங் சங் என்ற படத்திற்காக நடிகர் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். #PrabhuDeva #YungMungSung
    வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்".

    இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.



    படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘பிரபுதேவாவின் காக்கி’ தற்போது ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். #PonManickavel #PrabhuDevainKhakki
    நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.

    இந்நிலையில், நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க தொடங்கினார். இதில் பிரபுதேவா போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இப்படத்தை ‘பிரபுதேவாவின் காக்கி’ என்று அழைத்து வந்தார்கள். தற்போது இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபாகர் நடித்து வருகிறார்.



    கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Prabhudeva #PonManickavel #PrabhuDevainKhakki
    பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
    நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினாகைப் ஆகியோரை அழைத்து இருந்தோம்.

    இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்சி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்த தள்ளி வைத்தோம்.



    இதுவரை நிகழ்ச்சியை நடத்தி கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்குவதற்காக பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாக கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்”.

    இவ்வாறு மனுவில் குறிப்படப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×