search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன் ராஜா"

    • நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது
    • கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

    இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த கதையாசிரியருக்கான விருது மோகன் ராஜா தனி ஒருவன் படத்திற்காக பெற்றார். இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார்.

    சிறந்த நடிகருக்கான விருதை கவுதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்திற்கு பெற்றார்.

    தனி ஒருவன் படம் அதிக விருதை அள்ளியது. அரவிந்த சாமி சிறந்த வில்லனுக்கான விருதும்.ராம்ஜி சிறந்த ஒளிபதிவாளர் விருதும்,கோபி க்ருஷ்ணா சிறந்த எடிடர்கான விருதும், பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குநர்கான விருதும் பெற்றனர்.

    மாதவன் இறுதிச்சுற்றுக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.ஜோதிகா 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை சிங்கம் புலி வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினி வென்றார்.கிப்ரான் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர்கான விருதை வென்றார்.

    ஜோதிகா விருதை வாங்கி தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்தார்.கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும், தனது குடும்பத்துக்கும், இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாத்துக்கும். தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனதுக்கு அவரின் நன்றியை தெரிவித்துள்ளார்.

    நேற்று விருது வழங்கப்பட்ட பட்டியல்.

    சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்

    சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2

    சிறந்த படம் மூன்றாம் பரிசு - ப்ரபா

    சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு - இறுதிச்சுற்று

    பெண்கள் முன்னேற்றதிற்கான சிறந்த படம் - 36 வயதினிலே

    சிறந்த நடிகர் - மாதவன் [இறுதிச்சுற்று]

    சிறந்த நடிகை - ஜோதிகா[36 வயதினிலே]

    சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு - கவுதம் ராஜா [ வை ராஜா வை]

    சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு - ரித்திக்கா சிங் [இறுதிச்சுற்று]

    சிறந்த வில்லன் - அரவிந்த் சாமி [தனி ஒருவன்]

    சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [ அஞ்சுக்கு ஒன்னு]

    சிறந்த நகைச்சுவை நடிகை - தேவ தர்ஷினி [ திருட்டு கல்யாணம், 36 வயதினிலே]

    சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் [அபூர்வ மகான்]

    சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி [ பாபநாசம்]

    சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா {இறுதிச்சுற்று]

    சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா [ தனி ஒருவன்]

    சிறந்த வசன எழுத்தாளர் - சரவணன் [கத்துக்குட்டி]

    சிறந்த இசையமைபாளர் - ஜிப்ரான் [ உத்தம வில்லன், பாபநாசம்]

    சிறந்த பாடலாசிரியர் - விவேக் [36 வயதினிலே]

    சிறந்த பின்னணி பாடகர் [ஆண்] - கானா பாலா {வை ராஜா வை}

    சிறந்த பின்னணி பாடகர் [ பெண்] - கல்பனா ராகவேந்தர் [36 வயதினிலே]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி [தனி ஒருவன்]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)

    சிறந்த ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எல்.துக்காராம், ஜே.மகேஸ்வரன் (தாக்க தாக்க)

    சிறந்த எடிட்டர் - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

    சிறந்த கலை இயக்குனர் - பிரபாஹரன் (பசங்க 2)

    சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் - டி ரமேஷ் (உத்தம வில்லன்)

    சிறந்த நடன இயக்குனர் - பிருந்தா (தனி ஒருவன்)

    சிறந்த ஒப்பனை - சபரி கிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வாசுகி பாஸ்கர் (மாயா)

    சிறந்த குழந்தை கலைஞர் - மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

    சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)

    சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - ஆர் உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

    • இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’.
    • இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

    கடந்த 2004-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இந்த திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்த இப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி' என்ற படத்தினுடைய ரீமேக் என்றாலும் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல நாட்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தது.


    இந்நிலையில், 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதும் எழுதி முடித்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த பாகத்தில் நடிகை நதியா காதாபாத்திரம் இடம் பெறாது என்றும் மோகன் ராஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
    • தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோவிற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார்.

    ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

    • இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ‘தனி ஒருவன்’.
    • இப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

    மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

    தனி ஒருவன்

    ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என கூறியிருந்தார்.

    தனி ஒருவன்

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி 'தனி ஒருவன்' இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, ரசிகர் ஒருவர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயம் ரவி 2024-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என பதிலளித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     

    சொப்பன சுந்தரி படக்குழு

    சொப்பன சுந்தரி படக்குழு


    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குனர்கள் தான். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அருண் ராஜா, 'க /பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குனர் விருமாண்டி, 'சொப்பன சுந்தரி' படத்தை வழங்கிய இயக்குனர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குனர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குனர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும், காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

    இயக்குனர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.

     


    ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குனர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால். அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குனர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால், மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இப்படம் முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. '' என்றார்.

    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     


    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதனை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டார். அதன்பின் அவர் பேசியதாவது, ''என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. 'வேலைக்காரன்' படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குனராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் 'லாக்கப்' எனும் படத்தை இயக்கினார். 'லாக்கப்' ஒரு உணர்வுபூர்வமான படைப்பு.

    சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'சொப்பன சுந்தரி' என்றதும் அனைவருக்கும் 'கரகாட்டக்காரன்' பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த 'சொப்பன சுந்தரி'யை பட வெளியிட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.


    சொப்பன சுந்தரி 

    சொப்பன சுந்தரி 


    அண்மை காலமாக 'தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்.


    மோகன் ராஜா 

    மோகன் ராஜா 


    விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும், அனைத்து திரைப்படங்களையும், திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்து செல்வது சினிமா அல்ல. தெரியாமல் சென்று இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வது தான் சினிமா. எனவே அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
    • இப்படத்தின் வசூல் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார்.

    சிரஞ்சீவி - நயன்தாரா

    சிரஞ்சீவி - நயன்தாரா

     

    தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தை இயக்கியுள்ளார்.

     

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கானும் நடித்துள்ளனர். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    காட் ஃபாதர் வசூல் அறிவிப்பு

    காட் ஃபாதர் வசூல் அறிவிப்பு

    இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காட் ஃபாதர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.38 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
    • திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார்.

     

    சிரஞ்சீவி - நயன்தாரா

    சிரஞ்சீவி - நயன்தாரா

    இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

     

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    இந்நிலையில் 'லூசிபர்' படம் நேற்று (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ரீமேக் படங்கள் அந்த மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யப்படும் போது சில சறுக்கல்களை சந்திக்கும் ஆனால் இப்படத்தில் மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமத்தால் சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் பார்வையாளர்கள் ரசிக்கும் படியும் படத்தை எடுத்துள்ளார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

    • மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் லூசிபர்.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் மற்றும் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

     

    சல்மான் கான் - சிரஞ்சீவி

    சல்மான் கான் - சிரஞ்சீவி

    இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது, உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. "நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள், நான் தென்மாநிலங்களுக்கு செல்ல விரும்புகிறேன்.

    காட் ஃபாதர் படக்குழு

    காட் ஃபாதர் படக்குழு

     

    பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ.300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும் என கூறினார்.

    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் மோகன் ராஜா கொடுத்துள்ளார்.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

     

    சிரஞ்சீவி - நயன்தாரா

    சிரஞ்சீவி - நயன்தாரா

    இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    சிரஞ்சீவி

    சிரஞ்சீவி

     

     

    'லூசிபர்' படம் நாளை (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏக்கோ ராஜா என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

    காட்ஃபாதர்

    இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    காட்ஃபாதர்

    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.
    • இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்திற்கு 'காட்ஃபாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

    பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'காட்ஃபாதர்' படத்தின் பாடல் ஒன்று நிறைவுபெற்றுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு பிரபுதேவாவுடன் பணிபுரிந்தது என்ன ஒரு அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.



    ×