search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் வசதி"

    • மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
    • மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இலுப்ப நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதனிடையே இப்பகுதியில் இருந்து சென்று வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், மனுவாக ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கினர்.

    ஆனால் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய வசதி இல்லாததால் ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் நடந்தே செல்லும் நிலை உருவாகியது.

    எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி அதன் எதிரொலியாக இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மூக்கனூர் வழியாக சென்ற அரசு பேருந்து அண்ணா நகர், வெங்கட்ராமபுரம் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசு பள்ளி வழியாக காலை 8 மணிக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு இதே வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து மாணவர்கள் செல்கின்றனர்.
    • இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செம்பட்டையங்கால் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்கள் பஸ் ஏறுவதற்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது 2 கிலோமீட்டர் தூரம் தினமும் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு எம். புதுப்பட்டி, கோவிந்தநல்லூர், நத்தம்பட்டி, மூவரைவென்றான், கல்லுப்பட்டி செல்லும் டவுன் பஸ்கள் செம்பட்டையங்கால் ஊருக்குள் வந்து மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.

    இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள். இதனை அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
    • இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    ஈரோடு:

    ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர்.

    தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.

    இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.

    திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.

    மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும்.

    பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    குன்னம்:

    ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும், அரியலூர் மாவட்ட பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமங்கள். இந்த 2 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். விவசாயிகள் அதிகாலையில் அரியலூர் மார்க்கெட்டிற்கு தினசரி டவுன் பஸ்சில் காய்கறி கொண்டு செல்வது வழக்கம். அன்றாடம் 50-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு 2 கிராம மக்களும் அப்பகுதியில் வரும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் 2 கிராமங்களுக்கு சுமார் 20 நடை வந்து சென்றன.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உசேன் நகரம் கிராமத்தில் தொடங்கி புஜங்கராயநல்லூர் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நொச்சிகுளம் கிராமத்தில் தெற்குதெருவில் உள்ள வளைவில் புதிதாக தரை பாலம் அமைக்கப்பட்டது. இதன் பணி முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகின்றது. மேலும் இந்த புதிய தார்ச்சாலையில் 2 சறுக்கு பாலமும் அமைக்க வேண்டி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது

    கடந்த 5 மாதங்களாக நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமத்தின் ஊருக்குள் டவுன் பஸ்கள் வராமல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு எரிகரை முன்பாகவே இரண்டு கிராம மக்களையும் இறக்கி விட்டு விட்டு உசேன் நகரம் வழியாக அரியலூருக்கும், கூத்தூர் வழியாக ஆலத்தூர் கேட், பெரம்பலூருக்கும் சென்று விடுகின்றன. இதனால் 2 கிராம மக்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதில் சிலர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடம் பயத்துடன் ‘லிப்ட்’ கேட்டு வந்து செல்கின்றனர். விவசாய பொருட்களை தலைச்சுமையாக தூக்கி செல்கின்றனர்.

    2 கிராம மக்களின் சிரமத்தை போக்க புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை பணியை விரைந்து முடித்தும், நொச்சிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் விடுபட்ட பணிகளை விரைந்து முடித்தும், அந்த கிராம மக்களின் சிரமத்தை போக்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் சிரமத்தையும் கவனத்தில் கொண்டு போக்கிடுமாறும், அவ்வாறு விரைந்து சாலைப் பணியை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
    பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்யக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா கொட்டறைகுன்றை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

    அதில், கொட்டறைகுன்று கிராமத்தில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு பஸ் வசதி இல்லை. இதனால் நாங்கள் பள்ளிக்கு தினமும் 3½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறோம். இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம். கொட்டறைகுன்று பகுதியில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    பாரதீய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் சிவராமன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா அத்தியூர் கிராம ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், அத்தியூர் கிராம ஊராட்சியில் 50 பேருக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்ட பயனாளியாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது அந்த வீடுகளை கட்டி வருகின்றனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்கு வெள்ளாற்றில் மணல் எடுக்க அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இலவச வீடு கட்டுவதற்கு தேவையான மணலை வெள்ளாற்றில் இருந்து எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்தனர். அதில், பாடாலூர்-சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்தோம்.

    அதன்படி பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அதற்கான இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே பாடாலூரில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 
    ×