search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் காப்பீடு"

    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-

    வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

    எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாலிசி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ரூபவ் வேளாண்மை துறையின் சார்பில் ரூபவ் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூபவ் 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூபவ் பாலிசி பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பயர் காப்பீடு பாலிசி பத்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 60 ஆயிரத்து 109 விவசாயிகளால் 63 ஆயிரத்து 50.72 எக்டேர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரிமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் மானிய தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங் கள் விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரூபவ் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பாலிசி பத்திரங்கள் ரூபவ் பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படு கிறது.

    காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் பாலிசி பத்திரங்களை நேரடியாக பெற்று அதில்கு றிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விபரங்களை சரி பார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
    • வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

    சீர்காழி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.

    இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.

    வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

    இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.

    தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

    இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.
    • பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளி–யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

    விவசாயிகள் முன்மொழிவுப்படிவம், விண்ணப்பப்படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவீதம் பிரிமியமும், இதர குறுகிய காலப் பயிர்களுக்கு 1.5 சதவீதம் பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். எனவே கபிலர்மலை வட்டார விவசாயிகள், நடப்பு 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார். 

    • பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
    • கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பசுமை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பூவலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த ஆண்டில் பயிர் காப்பீட்டிற்கு தொகை கட்டியும், இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை. அந்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது."

    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

    நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
    • வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார் தங்கவேல், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உழவர் நலத்துறையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பயிர் காப்பீடு செய்ய தேவையான அடங்கல் மற்றும்பிற ஆவணங்களை விவசாயிகள் பெற்று சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்தனர். சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.  

    • நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.
    • தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொழிய தொடங்கியுள்ள காரணத்தால் வெவ்வேறு நிலைகளில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வருகிற 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுங்கள்.

    இந்த திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் (சம்பா), பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் ஆவர்.

    பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.

    விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நடப்பு சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், முன் மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் போன்றவற்றுடன் ரூ.497 பிரீமிய தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொண்டும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகாரி தகவல்
    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத் தில் நடப்பு சம்பா பட்டத்தில் இதுவரை 1,159-ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை, முதல் மிக கனமழை பெய்து வருகிறது. எனவே பருவமழை மிக அதிகமாக பெய்து சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே, விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி விவசாயிகள் வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி நேர பதிவை தவிர்த்து உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து கொள்ளு மாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப் பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங் கும் அடங்கல் சான்று (பசலி 1432) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், உள்ளிட் டவற்றை சமர்பித்து மேற்கண்ட ஆவணங்களின் புல எண். தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள்.

    பேராவூரணி :

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

    பேராவூரணி வட்டாரத்தில் இதுவரை 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வட்டாரத்தில் இயல்பான சம்பா சாகுபடி பரப்பு 5,500 ஹெக்டேர் ஆகும்.

    சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என்பதால் தற்போது நாற்று விட்டு நடவு மேற்கொள்ள உள்ள விவசாயிகள் தாமதம் இன்றி நவம்பர் 10ஆம் தேதிக்குள் நடவு பணியினை முடித்து பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்குரிய பிரீமியத் தொகை ரூபாய் 539.

    இதற்கான காப்பீட்டு தொகை ரூபாய் 35,900 ஆகும்.

    கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்களை சமர்பித்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    கடன் பெறா விவசாயிகள் ஏதேனும் ஒரு இ சேவை மையம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நவம்பர் 15ம் தேதிக்குள் பிரீமியத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆண்டில் பயிர் காப்பீடு திட்ட மானதுரிலையன்ஸ் பொது பயிர் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பயிர் காப்பீடு செய்யும் போது எந்த கிராமத்தில் நிலம் அமைந்துள்ளதோ, அந்தக் கிராமத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    குடியிருப்பு கிராமத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் குறிப்பிடக் கூடாது.

    பயிர் காப்பீடு செய்தமைக்கான ரசீது மற்றும் இதர ஆவணங்களை பயிர் காப்பீடு தொகை பெரும் வரையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15 கடைசி தேதி என்பதால் இறுதி நாள் வரை காத்திருக்காமல் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

    • கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுக வேண்டுகோள்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 - 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 515 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே , கும்பப்பூ பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் 1 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் ( இ - சேவை மையங்கள் ) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள " விவசாயிகள் கார்னரில் " நேரிடையாக காப்பீடு செய்யலாம் . முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ - அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×