search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் வைத்து"

    • பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த சீமாச்சிகளி என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சைய்யா (60). சிதம்ஆலப்பா (50), கல்வீரப்பா (52), மாதேஷ் (37) ஆகியோர் என்பது தெரிவந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ. 7000, சீட்டு கட்டு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு அருகே உள்ள சமுதாய கூட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஷ்கண்டா (32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) ஆகியோர் என தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    • அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப் -இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தியூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தாமரைக்கரை பகுதியை சேர்ந்த சித்தன், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், சேகர், சந்தோஷ், ராஜா, குமார், ஊசி மலையை சேர்ந்த கிரியன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 11,960 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    • சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    • பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.

    விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
    • மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை சுற்று வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவ ர்கள் கேத்தம்பாளையத்தை சேர்ந்த செல்வன் (40), ரமேஷ் (39), பழனிசாமி (42), மேட்டுக்கடையை சேர்ந்த மணி (62), சுந்தரம் (60), முருகேசன் (33), நாகராஜ் (37), பிரசாந்த் (30) என்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல சத்தியமங்கலம் குள்ளன்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டில் சூதாடியதாக ஜெகதீஸ்வரன் (54), சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற கருப்புசாமி (40), கிரண் (32), சம்பத்குமார் (43), ஜெகநாதன் (45), ராமலிங்கம் (40), ரமேஷ் (34), ரவி (42) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.7,755 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×