பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஈரோடு:

தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தாளவாடி அடுத்த சீமாச்சிகளி என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சைய்யா (60). சிதம்ஆலப்பா (50), கல்வீரப்பா (52), மாதேஷ் (37) ஆகியோர் என்பது தெரிவந்தது.

இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ. 7000, சீட்டு கட்டு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com