search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் திருட்டு"

    • உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் இந்த மாரியம்மன் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.ஆயிரத்தை கொள்ளையடித்து எடுத்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர்.

    மேலும் அங்கு பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    உண்டியலில் மேலும் ரூபாய் நாணயங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவிலின் திருவிழா நடந்து முடிந்தது.

    இதையொட்டி உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.

    • முதல் மாடியில் கவின்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
    • வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, மே.1-

    ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் (32) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார்.

    முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், முதல் மாடியில் கவின்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஹாலில் கவின்ராஜ், தமிழரசு, அபிராமி ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காற்றுக்காக சுமதி மொட்டை மாடிக்கு தூக்க சென்றார். அவர் செல்லும் போது கதவை தாழ்படாமல் திறந்து வைத்து சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு கவின் ராஜ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

    வீட்டின் அறையில் உள்ள பீரோ அருகே சாவி இருந்தது. சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். போகும்போது கவின்ராஜ் வீட்டில் இருந்த இரண்டு விலை உயர்ந்த ஸ்மார்ட் போனையும் திருடி கொண்டு சென்றனர்.

    இன்று காலை கவின்ராஜ் எழுந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு பீரோவை பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கவின்ராஜ் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது.

    அது சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வீட்டில் ஆள் இருக்கும்போதே நடந்த இந்த துணிகர திருட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமங்கலத்தில் தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வீட்டின் பராமரிப்புக்காக முருகன் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது47), தொழிலாளி. இவரது மனைவி அழகம்மாள் கப்பலூரில் உள்ள ஐ.ஓ.சி.யில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்றுகாலை வழக்கம்போல் கணவன்-மனைவி வேலைக்கு சென்றுவிட்டனர். மகன்-மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த ரூ.25ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய முருகன் கதவு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில் வீட்டின் பராமரிப்புக்காக முருகன் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

    அதில் மீதமிருந்த ரூ. 25 ஆயிரத்தை பீரோவில் வைத்திருந்த போது திருடு போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
    • விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அருகே, கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் அளவையாளராக கோமதி யும், உதவியாளராக சிவகு மாரும் பணிபுரிந்து வரு கின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இன்று காலை விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வந்த போது, ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக வைக்கப்பட்டி ருந்த ரூ.28ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பணியா ளர்கள் வாழப்பாடி போலீ சில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர் சிலையையும் சேதப்படுத்தி சென்ற மர்மகும்பல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் ஆர்.எம்.பி. நகரில் ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன கோவில் உள்ளது.

    நேற்று மாலையில் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்படும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி இருந்தது. உண்டியல் உடைக்கப்பட்ட அதிலிருந்து பணமும் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கோவில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்-வேலூர் செல்லும் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிலையை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
    • வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் முருகவேல். இவர் அம்மன் சன்னதி விட்டவாசல் பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முருகவேல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர்.

    இதுபற்றி அறிந்த முருகவேல் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை போனது பற்றி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு கைவரிசையை காட்டியது தெரிய வந்தது. இருந்தபோதிலும் ஒரு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

    கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரின் முகம் மற்றும் உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடை அணிந்து சென்று திருடியது கண்டறியப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் தலைமையில் மீனாட்சி கோவில் போலீஸ் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில் விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.

    பிடிபட்ட வாலிபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இர்ஷாத் என்பவரின் மகன் ஷபாஸ் (வயது 21) என்பதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் 2 பேர் அவரது சகோதரர்கள் என்பதும், இன்னொருவர் உறவினர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக கொள்ளையன் ஷபாஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேலை தேடி மதுரைக்கு வந்ததாகவும், அப்போது திருட்டில் ஈடுபட முடிவு செய்து திரிந்தபோது சம்பந்தப்பட்ட கண்ணாடி கடையில் தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுவதை பார்த்ததும் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவர் தனது சகோதரர்கள் மற்றும் உறவினரை அழைத்து வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
    • வீடு திரும்பினர் அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு நேற்று சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பெயரில் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்தது திண்டிவனம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது
    • பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சார்ந்தவர் ஜனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (27).

    தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாயார் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு இவரும் இவரது மனைவி தாரணியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளனர். வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ லாக்கரும் உடைக்கப் பட்டு இருந்தது.

    அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் காணாமல் போயிருந்தது. உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பார்த்த சந்தோஷ் குமார்

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர்.
    • 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேதராப்பட்டு:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ். தொழிலதிபரான இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கட்டுமான பணியினை காண்ட்ராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.

    100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தெலுங்கானா, தமிழகம், புதுவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களும், என்ஜினீயர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    காலாப்பட்டு பங்களா தெருவில் சிறிய அலுவலகத்துடன் கூடிய வீடு ஒன்றை தொழிலதிபர் ஹரிஷ் வாடகைக்கு எடுத்து அங்கு புதுவை மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 4 என்ஜினீயர்களை தங்க வைத்து கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 4-ந்தேதி ஹரிஷ் ஐதராபாத்தில் இருந்து காலாப்பட்டில் உள்ள என்ஜினீயர்களுக்கு போன் செய்து முக்கிய நபர் ஒருவர் ரூ.35 லட்சம் பணம் தருவார். அதை வாங்கி பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சத்தை அங்கு தங்கியிருந்த என்ஜினீயர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட அந்த பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த பணம் திருட்டு போன சம்பவத்தில் அறையில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு என்ஜினீயர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 3 என்ஜினீயர் உட்பட 4 பேரிடம் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவில் பூசாரி தியாகராஜன் நேற்று காலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மதிய நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் சன்னதி முன்பு இருந்த உண்டியலை பெயர்த்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    மாலையில் கோவிலுக்கு வந்த தியாகராஜன் உண்டியல் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணங்கோட்டையில் கடந்த 11-ந் தேதி 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தாய், மகள் கொலை செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மர்மநபர்கள் காம்பவுன்டு சுவர் ஏறி திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி நாய்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.

    கடந்த சில மாதங்களாகவே தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை-கொள்ளை, வழிப்பறி, நகைபறிப்பு போன்றவை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு இதுபோன்ற துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண். இவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×