search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் உடைத்து"

    • இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்ைத கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியில் கச்சேரி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்ைத கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனைநேற்று காலை கோவிலை திறந்து, சுத்தம் செய்ய வந்த நபர்கள் கோவிலின் உண்டியல் உடைத்திருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர். உடனடியாக கோவில் தர்மகர்த்தா ஆறுமுகத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

    இது தொடர்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டனர்.

    அதில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம இரண்டு மர்ம நபர்கள், சாலை ஓரம் உள்ள கச்சேரி முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடி எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் இந்த மாரியம்மன் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.ஆயிரத்தை கொள்ளையடித்து எடுத்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர்.

    மேலும் அங்கு பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    உண்டியலில் மேலும் ரூபாய் நாணயங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவிலின் திருவிழா நடந்து முடிந்தது.

    இதையொட்டி உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.

    ×