search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான் முதல்வன்"

    • ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1055 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசு பள்ளி மாணவர் களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் வகையிலும், உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அருகிலுள்ள கல்லூரி களுக்கு அழைத்துச் செல் லும் பயணத்தை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டு மென்ற நோக்கில், வழி காட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் முன் னோடி திட்டம் மற்றும் தமிழக முதல் அமைச்சர் கனவு திட்டமான நான் முதல்வன் நிகழ்வை வெற்றி கரமாக கொண்டு செல்லும் பொருட்டு, மாவட்ட நிர் வாகம் சார்பில் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயிலும் 1500 மாணவ- மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயன்பெற்றனர்.

    இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயிலும், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள தலைசிறந்த பொறியி யல், கலை மற்றும் அறிவியல், விவசாயக் கல்லூரி, மருத்து வக் கல்லூரி ஆகிய கல்லூரி களுக்கு பார்வையிட இன்று முதல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் நேற்று முதல் 23-ந்தேதி வரை அழைத்து செல்லப்படு கின்றனர்.

    இந்த மாணவர்கள் விருதுநகர் சேது பொறியியல் கல்லூரி, மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, காமராஜர் பல் கலைக் கழகம், அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளன.

    அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை, காரியாபாட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், விருது நகர், சிவகாசி, வெம்பக் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பஸ்களில் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.

    இம்மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர் கல்வியில் உள்ள வாய்ப்பு கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர் கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகை யிலும், உயர்கல்வி பயில் வதற்கு ஆர்வத்தை ஏற்படுத் தும் வகையிலும், அவர் களுக்கு சரியான வழி காட்டுதல் வழங்கும் வகை யிலும், கல்லூரி நிர்வாகத் தால் விரிவாக எடுத்துரைக் கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    எனவே மாணவர்கள் இந்த உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உயர்கல்வியை நாடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளது.
    • வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி பேராசிரியர்க ளுக்கான பயிற்சி கருத்த ரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு ேபசியதாவது:-

    "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த திட்டம் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    நான் முதல்வன் இயங்கு தளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில், கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்த அரசால் அறிவுறுத்தப்பட்டு திறன்மிக்க பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச அளவிலான மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மேற்படி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க https://naanmudhalvan.tn.gov.in/tnskills/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில குழுவாக பங்குபெறும் சில தொழில் பிரிவுகளுக்கு கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் பழகுநர்கள் பயிற்சி முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

    இப்போட்டிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். திறன் ேபாட்டிக்கு பதிவு செய்திட ஜூலை 7-ந் தேதி கடைசி என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலஅளவிலான திறன் போட்டிக்கும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலும்,இந்திய அளவில் வென்றவர்கள் சர்வதேச அளவிலான திறன் போட்டிக்கும் பங்கு பெறலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421-2250500, 94990 55695,94434 71184. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது கீ QR Code- மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பங்கேற்கலாம்.
    • பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    அவினாசி:

    அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்ட கலந்தாய்வு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் எஸ்.பாலசுப்ரமணியன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பயிற்றுநா் பாலசுப்ரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா். பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 100 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி, பயிற்சி முடித்த பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு, பயிற்சிக்கான தொகையை அரசே ஏற்பது, தற்போது பயிலும் கல்விக்கு இடையூறு இல்லாமல் பயிற்சியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியப் பொறுப்பாளா் போ.மணிவண்ணன் ஒருங்கிணைத்தாா்.முடிவில் தமிழ்ப் பேராசிரியா் புனிதராணி நன்றி கூறினாா்.

    • முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • கல்வி கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் :

    திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அரசு, நகர அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவியா் பங்கேற்றனர்.

    2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவா்கள் உயா்கல்வியை தோ்வு செய்வதில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட்டது. மாணவா்களின் ஆற்றலுக்கு ஏற்ப உயா் கல்வியைத் தோ்வு செய்வது குறித்தும் வேலைவாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும், கல்விக் கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன அதில் மாணவர்கள் கல்வி கடன் கோரி விண்ணப்பம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் க.செல்வராஜ் எம். எல்.ஏ., மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன், கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களின் எதிா்கால கனவுகளை நனவாக்கும் வகையில், உயா்கல்வி வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  

    ×