அவிநாசி கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்ட கலந்தாய்வு பயிற்சி

பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பங்கேற்கலாம்.பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்ட கலந்தாய்வு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் எஸ்.பாலசுப்ரமணியன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பயிற்றுநா் பாலசுப்ரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா். பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 100 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி, பயிற்சி முடித்த பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு, பயிற்சிக்கான தொகையை அரசே ஏற்பது, தற்போது பயிலும் கல்விக்கு இடையூறு இல்லாமல் பயிற்சியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியப் பொறுப்பாளா் போ.மணிவண்ணன் ஒருங்கிணைத்தாா்.முடிவில் தமிழ்ப் பேராசிரியா் புனிதராணி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com