search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும்.
    • கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும். ஆகையால் கோவிலில் பூஜை செய்யும் நமது சமூக சொந்தங்கள் அன்று மாலை கோவில்களை மாலை 6.15 மணிக்குமேல் திறந்து வழக்கமான பூஜைகளை செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும் முருகன் கோவில் பிரதானமாக உள்ள கோவில்கள் சூரசம்ஹார கொடியேற்றத்தினை மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும், சாந்தி செய்வது உத்தமம். மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.

    சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

    மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது.

    • தஞ்சை வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபாலசாமி கோவில்.
    • இந்த கோவில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

    இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.

    மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    சித்திரை நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் அன்று மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள்

    தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    • மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.
    • மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திரம் திருநாள். இன்று உத்திர நட்சத்திரம் அமிர்த யோகத்துடன் கூடி வருகிறது. மேலும் இன்று சஷ்டி திதி தினமாகும். இன்று காலை 8.05 மணிக்கு தொடங்கும் உத்திரம் நட்சத்திரம் நேரம் நாளை (6-ந்தேதி) காலை 8.39 மணி வரை உள்ளது. எனவே இன்று காலை சிவனை வழிபட்டால் மாங்கல்ய யோகம் உண்டாகும்.

    தமிழகத்தில் உத்திரம் நட்சத்திர நாள் வழிபாட்டுக்கு புகழ் பெற்ற தலமாக திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் சுவாமி கோவில். இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மாங்கல்ய தோஷத்தை போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி மங்களாம்பிகை மங்காளம்பிகை அம்மன். மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத் இது திகழ்கிறது.

    இக்கோவிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். அவரது நட்சத்திரம் உத்திரமாகும். பொதுவாகவே உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனாலேயே தான் பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்கள் நடத்தப்படுகிறது. பூ மாலைகளில் தங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குருவாக போற்றப்படுகிறார்.

    பொதுவாக சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன் மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம். திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோவிலாக இது திகழ்கிறது.

    உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ உத்திர நட்சத்திரக்காரர்கள் இடையாற்றுமங்கலத்தில் உள்ள மாங்கலீஸ்வரர் கோவிலுக்கு வந்து, மாங்கல்ய மகரிஷி, மாங்கலீசுவரர்- மங்களாம்பிகையை மனதார வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். மேலும் உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும், தங்கள் நட்சத்திரத்தன்று இக்கோவிலுக்கு வந்து சுவாமி, அம்பாள், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை சாற்றி மனதுருகி அவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட வேண்டும். அதேபோல மங்களாம்பிகை அம்மனுக்கும், மாங்கலீஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண வரன் தேடி வரும். திருமணம் உறுதியான பின்னர் கோவிலுக்குத் திருமண அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்கு அழைப்பிதழை வைத்து பிரார்த்திக்க வேண்டும்.

    திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு. திருமணம் முடிந்த பின்னர் தம்பதியராக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.

    உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோவிலிலுள்ள சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே பிரதிபலிக்கிறது.

    திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் கோவிலாக மட்டுமின்றி, குடும்ப ஒற்றுமை, உடலில் கால்வலி குணமடைய வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறது. மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இங்கு வழிபடுகிறார்கள்.

    இன்று (5-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    பேருந்துகளில் வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இடையாற்றுமங்கலத்துக்கு வரலாம்.

    சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்தும், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்தும், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், கார், வேன்களில் வருவோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெம்பர் 1 டோல்கேட் வந்து லால்குடி சாலையில் வாளாடி வந்து, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு, பெரியவர்சீலி, மயிலரங்கம் வழியாக இந்த கோவிலை வந்தடையலாம். ரெயில் மூலம் வரும் பக்தர்கள் லால்குடி ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கோவிலுக்கு ஆட்டோக்கள் மூலம் வரலாம்.

    மேலும் தொடர்புக்கு சீனிவாச குருக்களை 98439 51363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • திருமணத்திற்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது இந்தப் பொருத்தம்.
    • ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    நட்சத்திரப் பொருத்தங்களிலேயே மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டுகள் வாழ மாங்கல்யப் பொருத்தம் எனும் திருமண கயிறுப் பொருத்தம் மிக அவசியம். இது ஆயுளைப்பற்றிக் கூறும் பொருத்தமாகும்.

    தசவிதப் பொருத்தங்களில் அனைத்துப் பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்ற இந்தப் பொருத்தம் இல்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

    ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாதவர்களும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டுமே அசுப பலன்களை சந்திக்கிறார்கள். மற்ற காலங்களில் சிறு சிறு மனஸ்தாபத்தை மட்டுமே தருகிறது.

    • ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு மரம் உள்ளது.
    • இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

    உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது.

    பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

    மேஷம் - செஞ்சந்தனம் மரம்,

    ரிஷபம் - அத்தி மரம்,

    மிதுனம் - பலா மரம்,

    கடகம் - புரசு மரம்,

    சிம்மம் - குங்குமப்பூ மரம்,

    கன்னி - மா மரம்,

    துலாம் - மகிழ மரம்,

    விருச்சிகம் - கருங்காலி மரம்,

    தனுசு - அரச மரம்,

    மகரம் -ஈட்டி மரம்,

    கும்பம் - வன்னி மரம்,

    மீனம் - புன்னை மரம்.

    அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.

    • ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
    • உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

    நட்சத்திர மரங்கள்:

    அஸ்வதி- ஈட்டி மரம்,

    பரணி-நெல்லி மரம்,

    கார்த்திகை-அத்திமரம்,

    ரோகிணி-நாவல்மரம்,

    மிருகசீரிடம்- கருங்காலி மரம்,

    திருவாதிரை-செங்கருங்காலி மரம்,

    புனர்பூசம்-மூங்கில் மரம்,

    பூசம்- அரசமரம்,

    ஆயில்யம்- புன்னை மரம்,

    மகம்-ஆலமரம்,

    பூரம் -பலா மரம்,

    உத்திரம்-அலரி மரம்,

    அஸ்தம்- அத்தி மரம்,

    சித்திரை- வில்வ மரம்,

    சுவாதி -மருத மரம் ,

    விசாகம்- விலா மரம்,

    அனுஷம்- மகிழ மரம்,

    கேட்டை-பராய் மரம்,

    மூலம்- மராமரம்,

    பூராடம்- வஞ்சி மரம்,

    உத்திராடம்- பலா மரம்,

    திருவோணம்- எருக்க மரம் ,

    அவிட்டம்-வன்னி மரம்,

    சதயம்-கடம்பு மரம்,

    பூரட்டாதி- தேமமரம்,

    உத்திரட்டாதி- வேம்பு மரம்,

    ரேவதி-இலுப்பை மரம்.

    • 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது.
    • 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம்.

    மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

    * அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

    * பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன்

    * கார்த்திகை - சிவபெருமான்

    * ரோகிணி - பிறை சூடிய பெருமான்

    * மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்

    * திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

    * புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

    * பூசம் - நஞ்சுண்ணும் சிவன்

    * ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

    * மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

    * பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

    * உத்ரம் - நடராஜ பெருமான்

    * ஹஸ்தம் - தியான கோல சிவன்

    * சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்

    * சுவாதி - சகஸ்ரலிங்கம்

    * விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

    * அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

    * கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

    * மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

    * பூராடம் - சிவ-சக்தி-கணபதி

    * உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

    * திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

    * அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

    * சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

    * பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும்,

    சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

    * உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

    * ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

    • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.
    • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

    உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தாறாவது நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமான் ஆவார். சனி பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் மிகுந்த பொறுமை குணமும், கடினமாக உழைப்பவர்களாகவும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

    வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

    தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

    கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

    ×