search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய 10 நட்சத்திரக்காரர்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய 10 நட்சத்திரக்காரர்கள்

    • இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும்.
    • கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும். ஆகையால் கோவிலில் பூஜை செய்யும் நமது சமூக சொந்தங்கள் அன்று மாலை கோவில்களை மாலை 6.15 மணிக்குமேல் திறந்து வழக்கமான பூஜைகளை செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும் முருகன் கோவில் பிரதானமாக உள்ள கோவில்கள் சூரசம்ஹார கொடியேற்றத்தினை மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும், சாந்தி செய்வது உத்தமம். மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.

    சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

    மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது.

    Next Story
    ×