search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்பவனி"

    • ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

    • அல்லித்துறை புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள அல்லித்துறையில் 299 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர தேர்பவனி, கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் கோவிலில் பங்குத்தந்தைகளால் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு சோமரசம்பேட்டை பங்குத்தந்தை அருட்திரு எட்வர்ட் ராஜா திருப்பலியுடன் தொடங்கியது. மாதா, செபஸ்தியார், அருளானந்தர், சூசையப்பர், அந்தோனியார், மைக்கேல்சம்மனசு ஆகிய தெய்வங்கள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது.

    இவ்விழாவில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் 

    • புனித ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெற்றது.
    • சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்ற

    புதுக்கோட்டை

    இலுப்பூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புனித ஜெபமாலை மாதாவின் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை மாதாவின் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து புனித அந்தோணியார் ஆலயத்தில் மாதாவின் ஜெப வழிபாடும், அதனை தொடர்ந்து மாதாவின் சொரூபம் தாங்கிய தேர்பவனியும் நடைெபற்றது.

    இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு மாதாவின் பாடல் பாடியும், ஜெபம் செய்தும் மாதாவின் மன்றாட்டை கூறியும் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சாம்பிராணி காண்பித்து, மாலை அணிவித்தும் தங்களது வழிபாட்டை நிறைவேற்றினர்.தொடர்ந்து இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்."

    • 10 நாள் திருவிழா நிறைவு
    • வழி நெடுகிலும் நேர்ச்சை செலுத்தி மக்கள் வழிபாடு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திரு விழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழா நிறைவு நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார். காலை 7.30மணிக்கு பெரு விழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றி னார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.

    புனித ஜெபஸ்தியார் புனித தோமையார் ஆகிய 2 சப்பரங்கள் முன் செல்ல கடல் புதுமை மாதா தேரில் பவனி வந்தார். ஆலயத்துக்கு முன்பு இருந்து தொடங்கிய இந்த பவனி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை மாலை 5 மணிக்கு வந்து அடை ந்தது. வழி நெடுகிலும் மக்கள்நேர்ச்சைசெலுத்தி வழிபட்டனர். இதில் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்க ருணைஆசீர் நடந்தது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமை யார் ஆலய பங்குஅருட்பணியாளர், பங்கு அருட்பணி பேரவை யினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து இருந்தனர்.

    • மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி நடந்தது.
    • 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புகழ்பெற்ற குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இங்கு 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை, சிறியபல்லக்கில் குழந்தை தெரசாள் ஆலய வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சியில் இறைசெய்தி வாசிக்கப்பட்டது.

    முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி, மின்சார சப்பர தேர்பவனி நடந்தது. அருட்தந்தை செங்கோல் விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் சிறக்க வேண்டியும், மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டியும் திருப்பலி பூஜைகளை நடத்தினார்.

    முடிவில் ஆலயம் முன்பு குழந்தை தெரசாள் சொரூபத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மெயின் கடை வீதி வழியாக பவனி வந்து ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

    • புனித ஆரோக்கியமாதா ஆலய தேர்பவனி நடந்தது.
    • 25 ஆம் ஆண்டு திருவிழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பி.குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவிலில் 25 ஆம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோவிலில் நவநாள் ஜெபமும், பாடல் திருப்பலியும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குதந்தை அருட்திரு ஆர்கே அடிகளார் தலைமையில், அருட்தந்தை கித்தரிமுத்து, பங்கு குருக்கள், அருட்தந்தையர்கள், ்அருட்சகோதரிகள் ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலியுடன் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • புனித அதிசய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசியமாதா ஆலய தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    18, 19, 20 ஆகிய தேதிகளில் கோட்டைக்காடு எம்.எம்.ஐ. பங்குத்தந்தை செங்கோல் மேலப்பட்டி ஐயங்காடு மற்றும் வம்பன் காலனி மற்றும் ஆவுடையார்கோயில் உதவி பங்குத்தந்தை பிராங்கோ எடின், குளவாய்ப்பட்டி வாழைக்கொள்ளை மற்றும் வண்ணாச்சிக்கொள்ளை, மற்றும் வேளாங்கண்ணி பங்குத்தந்தை அற்புதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறை மக்களுக்காக திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.

    இன்று 21-ந்தேதி சிறுவர், சிறுமிகளுக்கான திவ்ய நற்கூருணை (புது நன்மை) விழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் நவ நாட்களில் பங்கு மக்கள் குடும்பத்தோடு அனைத்து திருப்பலி நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்துகொண்டனர்.

    தேர் பவனி நிகழ்ச்சியில் தேவமாக திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆர்கே அடிகளார் தலைமையில் சித்தேரிமுத்து முன்னிலையில் ஆலங்குடி நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலய தேவமாதா புகழ் பாடிக்கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தேர் பவனி ஆலங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

    விழாவில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் ஒன் றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பங்கு பணியாளர்கள், அருட்சகோதரிகள் பக்தசேவைக் குழுக்கள் அன்னதான குழு மற்றும் இளையோர் இயக்கம் ஆகியோர்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 10-ம் திருநாளான திங்கள்கிழமை பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழாவின் முக்கிய விழாவான தேர்பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இத்திருத்தல விண்ணேற்பு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தன. 2-ம் திருநாளான 7-ந் தேதி புதுநன்மை விழாவும், 8-ம் திருநாளான 13-ந் தேதி மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. அதையடுத்து தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர். தேர்களின் பின்புறத்தில் இறைமக்கள் கும்பிடு சேவை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதையடுத்து அருட்தந்தையர்களின் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    விழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இறைமக்கள், பொதுமக்கள், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி திருத்தல பங்குதந்தை அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு ரீகன், மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய பகுதி இறைமக்கள் செய்திருந்தனர்.


     


    • புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.

    பெரம்பலூர் புனித பனிமய மாதா ஆலயத்தின் பெருவிழாவையொட்டி பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அமிர்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடந்தது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று (4ம் தேதி) இரவு நடைபெற்றது.

    இதில் பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தேர்பவனியை தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. இதில் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (5ம்தேதி) பெருவிழா முடிகிறது.புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    • புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது.
    • பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேர்க்காடு பகுதியில் 480 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர் பணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு பணியாளர் மற்றும் வட்டார அதிபர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராத்தனை கூட்டம் நடந்தது. இரவு 9 மணி அளவில் சாமி சந்தியாகப்பர் மற்றும் மரியாள் மற்றும் தூதர் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் பவனி வந்தனர். இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திர ராமாவன்னி, ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், நகர்மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆலய பங்குதந்தை செபஸ்டின், பாம்பன் பங்குத்தந்தை இயேசு ஜெயராஜ், மண்டபம் பகுதி பங்குத்தந்தை ஜான் ராபர்ட், ராமேசுவரம் பகுதி பங்குத்தந்தை தேவசகாயம், தென்குடா பங்குத்தந்தைகள் சுந்தர்ராஜ், அருள்ராஜ், விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், அரியாங்குண்டு கிராமத்தலைவர் சந்தியாதாஸ், தென்குடா கிராமத்தலைவர் அந்தோணி சந்தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்மதத்தினர் பங்கேற்பு

    இந்த புனித யாகப்பர் ஆலயத்தில் ஏறத்தாழ 480 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள். இந்த திருவிழாவில் இந்துக்கள் அதிகமாக கலந்து கொண்டு முடி்காணிக்கை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    • கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், சோழவித்யா புரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழா கொடியே ற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட அதிபர் பன்னீ ர்செல்வம் தலைமையில் ஜெபமாலை, மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதை தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.கொடியேற்ற நிகழ்வில் சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவர் மரியசூசை, சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் கிறிஸ்துவ சமூதா யத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
    • தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த

    23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.

    இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.

    ×