search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித பரலோக மாதா"

    • 10-ம் திருநாளான திங்கள்கிழமை பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழாவின் முக்கிய விழாவான தேர்பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இத்திருத்தல விண்ணேற்பு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தன. 2-ம் திருநாளான 7-ந் தேதி புதுநன்மை விழாவும், 8-ம் திருநாளான 13-ந் தேதி மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. அதையடுத்து தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர். தேர்களின் பின்புறத்தில் இறைமக்கள் கும்பிடு சேவை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதையடுத்து அருட்தந்தையர்களின் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    விழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இறைமக்கள், பொதுமக்கள், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி திருத்தல பங்குதந்தை அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு ரீகன், மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய பகுதி இறைமக்கள் செய்திருந்தனர்.


     


    • இன்று இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலை நடக்கிறது.
    • நாளை காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

    வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மறையுறை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் நாள் விழாவான கடந்த 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது.

    10-ம் நாள் விழாவில் காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் திருப்பலிகள் நடைபெற்றது. மாலையில் அன்னையின் தேர்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலையும், காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    • தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர்.
    • தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது.

    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் திருப்பலி நடந்தது.

    விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமிதலைமையில் தேரடி திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர். காலை 6 மணிக்கு பாளை. சமூக பணியக செயலாளர் மைக்கேல், பாளை. மறைமாவட்ட பொறியாளர் எஸ்.ராபின் ஆகியோரும், காலை 8 மணிக்கு அம்பை பங்குதந்தை அருள் அம்புரோஸ், பாளை. மறைமாவட்ட திட்ட அலுவலர் தீபக் மைக்கேல் ராஜ் ஆகியோரும் திருப்பலி நடத்தினர்.

    காலை 10 மணிக்கு மண்ணின் மைந்தர்களும், மதியம் 12 மணிக்கு தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட், தூத்துக்குடி பங்குதந்தை ஜெரோசின் கத்தார் ஆகியோரும் திருப்பலி நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு பட்டாகுறிச்சி குரு மாணவர் இல்ல அதிபர் ஜாய் கல்லறக்கல் மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு வாரணாசி என்.பிரான்சிஸ் வியாகப்பன் இந்தியிலும் திருப்பலி நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு பாளை. சவேரியார் கலைமனைகள் சேசு சபை அருட்தந்தையர் திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 15-ம்தேதி அன்னையின் தேர் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றத்திற்கு முன்னதாக 3 திருப்பலிகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பங்குதந்தை ஜான் பிரிட்டோ கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடந்தது.

    விழாவில் அருட் தந்தையர்கள் செல்வராயர், வில்பர்ட், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், ஆரோக்கியராஜ், ராஜேஷ், சகாயராஜ், போஸ்கோ உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் 9-ம் நாளான வருகிற 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மாலையில் பாளையங்கோட்டை முன்னாள் மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    10-ம் நாள் அன்று காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் அன்னையின் தேர் பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்டம் முன்னாள் பிஷப் ஜீடு பால்ராஜ் தலைமையில் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் நடந்த திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை அந்தோணி குருஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழாவும், 13-ந் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடும், 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை.மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நடத்தி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து ரத ஊர்வலமும், இறை மக்கள் கும்பிடு சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விண்ணேற்பு பெருவிழா ரத ஊர்வலம் நடை பெறாமல், ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணேற்பு பெருவிழா நடை பெறுவதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இறை மக்கள் கலந்துகொள்வதால் பஸ் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு, சுகாதார வசதிகள், குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
    • 15-ந்தேதி அன்னையின் திருத்தேர் பவனி நடக்கிறது.

    வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றமானது நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக கொடியானது பவனியாக கொண்டு வரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

    அதிகாலை 5 மணி, 6.15 மணி, 7.45 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 15-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனியும் அதனைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, துணை பங்குதந்தை எழில் நிலவன் தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு நலப்பணி குழு மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • 7-ந்தேதி புதுநன்மை விழா நடக்கிறது.
    • 13-ந்தேதி மரியன்னை மாநாடு நடக்கிறது.

    கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி ஆலயத்துக்குள் மட்டும் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.

    அதன்படி, புனித பரலோக மாத ஆலய திருத்தலத்தில் ஆக.6-ந்தேதி மாலை 6 மணிக்கு விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ந்தேதி காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் எஸ். அந்தோணி சாமி தலைமையில் நடக்கிறது. விரதமிருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆலய வளாகத்தில் புதிதாக ரூ.35 லட்சத்தில் நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கட்டப்பட்டுள்ள சி.ம.விசுவாசம் அசன மாளிகை, மற்றும் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஆகியவற்றை பிஷப் எஸ்.அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

    அவருடன் திருத்தல அதிபர், பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெனால்டு அ.ரீகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×