search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது
    X

    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது

    • ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
    • 15-ந்தேதி அன்னையின் திருத்தேர் பவனி நடக்கிறது.

    வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றமானது நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக கொடியானது பவனியாக கொண்டு வரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

    அதிகாலை 5 மணி, 6.15 மணி, 7.45 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 15-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனியும் அதனைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, துணை பங்குதந்தை எழில் நிலவன் தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு நலப்பணி குழு மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×