என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
காமநாயக்கன் பட்டிபுனித பரலோக மாதா ஆலய தேர் பவனி
- தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர்.
- தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் திருப்பலி நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமிதலைமையில் தேரடி திருப்பலி நடந்தது.
தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர். காலை 6 மணிக்கு பாளை. சமூக பணியக செயலாளர் மைக்கேல், பாளை. மறைமாவட்ட பொறியாளர் எஸ்.ராபின் ஆகியோரும், காலை 8 மணிக்கு அம்பை பங்குதந்தை அருள் அம்புரோஸ், பாளை. மறைமாவட்ட திட்ட அலுவலர் தீபக் மைக்கேல் ராஜ் ஆகியோரும் திருப்பலி நடத்தினர்.
காலை 10 மணிக்கு மண்ணின் மைந்தர்களும், மதியம் 12 மணிக்கு தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட், தூத்துக்குடி பங்குதந்தை ஜெரோசின் கத்தார் ஆகியோரும் திருப்பலி நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு பட்டாகுறிச்சி குரு மாணவர் இல்ல அதிபர் ஜாய் கல்லறக்கல் மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு வாரணாசி என்.பிரான்சிஸ் வியாகப்பன் இந்தியிலும் திருப்பலி நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு பாளை. சவேரியார் கலைமனைகள் சேசு சபை அருட்தந்தையர் திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்