search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paraloga matha"

    • இன்று இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலை நடக்கிறது.
    • நாளை காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

    வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மறையுறை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் நாள் விழாவான கடந்த 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது.

    10-ம் நாள் விழாவில் காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் திருப்பலிகள் நடைபெற்றது. மாலையில் அன்னையின் தேர்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலையும், காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    • தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர்.
    • தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது.

    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் திருப்பலி நடந்தது.

    விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமிதலைமையில் தேரடி திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர். காலை 6 மணிக்கு பாளை. சமூக பணியக செயலாளர் மைக்கேல், பாளை. மறைமாவட்ட பொறியாளர் எஸ்.ராபின் ஆகியோரும், காலை 8 மணிக்கு அம்பை பங்குதந்தை அருள் அம்புரோஸ், பாளை. மறைமாவட்ட திட்ட அலுவலர் தீபக் மைக்கேல் ராஜ் ஆகியோரும் திருப்பலி நடத்தினர்.

    காலை 10 மணிக்கு மண்ணின் மைந்தர்களும், மதியம் 12 மணிக்கு தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட், தூத்துக்குடி பங்குதந்தை ஜெரோசின் கத்தார் ஆகியோரும் திருப்பலி நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு பட்டாகுறிச்சி குரு மாணவர் இல்ல அதிபர் ஜாய் கல்லறக்கல் மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு வாரணாசி என்.பிரான்சிஸ் வியாகப்பன் இந்தியிலும் திருப்பலி நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு பாளை. சவேரியார் கலைமனைகள் சேசு சபை அருட்தந்தையர் திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 15-ம்தேதி அன்னையின் தேர் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றத்திற்கு முன்னதாக 3 திருப்பலிகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பங்குதந்தை ஜான் பிரிட்டோ கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடந்தது.

    விழாவில் அருட் தந்தையர்கள் செல்வராயர், வில்பர்ட், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், ஆரோக்கியராஜ், ராஜேஷ், சகாயராஜ், போஸ்கோ உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் 9-ம் நாளான வருகிற 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மாலையில் பாளையங்கோட்டை முன்னாள் மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    10-ம் நாள் அன்று காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் அன்னையின் தேர் பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்டம் முன்னாள் பிஷப் ஜீடு பால்ராஜ் தலைமையில் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் நடந்த திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை அந்தோணி குருஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழாவும், 13-ந் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடும், 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை.மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நடத்தி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து ரத ஊர்வலமும், இறை மக்கள் கும்பிடு சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விண்ணேற்பு பெருவிழா ரத ஊர்வலம் நடை பெறாமல், ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணேற்பு பெருவிழா நடை பெறுவதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இறை மக்கள் கலந்துகொள்வதால் பஸ் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு, சுகாதார வசதிகள், குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
    • 15-ந்தேதி அன்னையின் திருத்தேர் பவனி நடக்கிறது.

    வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றமானது நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக கொடியானது பவனியாக கொண்டு வரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

    அதிகாலை 5 மணி, 6.15 மணி, 7.45 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 15-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனியும் அதனைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, துணை பங்குதந்தை எழில் நிலவன் தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு நலப்பணி குழு மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • 7-ந்தேதி புதுநன்மை விழா நடக்கிறது.
    • 13-ந்தேதி மரியன்னை மாநாடு நடக்கிறது.

    கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி ஆலயத்துக்குள் மட்டும் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.

    அதன்படி, புனித பரலோக மாத ஆலய திருத்தலத்தில் ஆக.6-ந்தேதி மாலை 6 மணிக்கு விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ந்தேதி காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் எஸ். அந்தோணி சாமி தலைமையில் நடக்கிறது. விரதமிருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆலய வளாகத்தில் புதிதாக ரூ.35 லட்சத்தில் நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கட்டப்பட்டுள்ள சி.ம.விசுவாசம் அசன மாளிகை, மற்றும் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஆகியவற்றை பிஷப் எஸ்.அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

    அவருடன் திருத்தல அதிபர், பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெனால்டு அ.ரீகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனியின் போது திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.

    விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர். 
    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயத்தின் 215-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருக்கொடி பவனியாக கொண்டு வரப்பட்டது. வடக்கன்குளம் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெரால்டுரவி, காவல்கிணறு மிக்கேல் மகிழன், ஜேம்ஸ், கலைச்செல்வன், மகிழன், கிங்ஸ்டன், சூசைமணி, கிளைட்டன் உள்பட பாதிரியார்கள், இறை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    விழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பாதிரியார் செல்வராயர் தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 8-ம் திருநாளான 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு திசையன்விளை பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு முதன்மை செயலர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது.

    14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காவல்கிணறு பாதிரியார் மகிழன் தலைமையில் திருப்பலி, 9 மணிக்கு ஜான் பிரிட்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    15-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மின்னொளியில் அன்னையின் தேர் பவனி நடக்கிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு தேரில் வைத்து நடைபெறும். 
    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. முன்னதாக நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    6-ம் திருநாளான 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடக்கிறது. 7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 9-ம் திருநாளான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    10-ம் திருநாளான 15-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் தேரடி திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறும். பின்னர் காலை முதல் மாலை வரையிலும் தொடர் திருப்பலிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. 
    ×