search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னமுட்டம்"

    • துறைமுகம் வெறிச்சோடியது
    • புயல், மழை எச்சரிக்கை எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல் மழை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி அவ்வப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது.

    மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவந்தனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதள மாகக்கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த3மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரை யோரமாக நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது.

    இதேபோல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம் கீழம ணக்குடி, மணக்குடி, பள்ளம் ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரை கிராமங்களிலும் பெரும்பா லான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
    • 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் முட்டை தரை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் 2 கால்கள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கு முகம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 2 கால்களையும் கைப்பற்றி உடல் பாகங்கள் எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர் பாக நாகர்கோவில் பட்டகா சாலியன் விளையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரை கொலை செய்து உடல்பாகங்களை திருவனந்தபுரம் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம், கோட்டார், போலீஸ் நிலை யங்களில் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    ரமேஷ் கொலை செய்ததாக கூறப்பட்ட அவரது நண்பர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். ரமேஷ் கூறிய அவரது நண்பர் கடந்த இரண்டு மாதங்களாக மாயமாய் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே கொலை செய் யப்பட்டது அவரது நண்பர் சின்னமுட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் (வயது 27) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரிடம் ரமேஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:-

    எனது தந்தை மணிகண்டன் கேரளாவில் வசித்து வருகிறார். என் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் என்னை வழக்கு தொடர்பாக தேடினால் உடனே நான் கேரளாவிற்கு சென்று விடுவேன். சின்ன முட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் எனது நண்பர் ஆவார். அவர் மீன்பிடிப்பதற்காக கேரளாவிற்கு வந்திருந்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன். பின்னர் கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். துணி யால் அவரது உடலை மூடி வைத்திருந்தேன். பின்னர் அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவர் உதவியுடன் பீட்டர் கனிஷ்கர் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசினேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இருப்பினும் போலீசார் கொலை செய்யப்பட்டது பீட்டர் கனிஷ்கர் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்டது யார் என்பது இறுதி முடிவு செய்யப்படும்.

    பீட்டர் கனிஷ்கர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • 10 நாள் திருவிழா நிறைவு
    • வழி நெடுகிலும் நேர்ச்சை செலுத்தி மக்கள் வழிபாடு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திரு விழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழா நிறைவு நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார். காலை 7.30மணிக்கு பெரு விழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றி னார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.

    புனித ஜெபஸ்தியார் புனித தோமையார் ஆகிய 2 சப்பரங்கள் முன் செல்ல கடல் புதுமை மாதா தேரில் பவனி வந்தார். ஆலயத்துக்கு முன்பு இருந்து தொடங்கிய இந்த பவனி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை மாலை 5 மணிக்கு வந்து அடை ந்தது. வழி நெடுகிலும் மக்கள்நேர்ச்சைசெலுத்தி வழிபட்டனர். இதில் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்க ருணைஆசீர் நடந்தது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமை யார் ஆலய பங்குஅருட்பணியாளர், பங்கு அருட்பணி பேரவை யினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து இருந்தனர்.

    • திரளான மக்கள் பங்கேற்பு
    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழாகடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றிவைத்தார்.

    திருவிழா வை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷமாலைஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.9-ம் திருவிழாவான நேற்றுகாலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிக ளுக்கான திருப்பலிநடந்தது.

    புதுக்கிராமம் பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமன் தலைமையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார். மாலை6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடந்தது.காரங்காடு பங்கு அருட்பணியாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்டணம்பங்கு அருட்பணியாளர் பபியான்ஸ் அருளுரை ஆற்றினார்.

    இரவு 9 மணிக்கு புனித தோமையார் சொரூ பத்துடன் சப்பரப்பவனி தொடங்கியது. நள்ளிரவு வரை வீதி, வீதியாக இந்த சப்பரபவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார்.

    காலை 7.30மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணி யாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞானபிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ்அருளுரை ஆற்றினார்.

    காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.இதில்சின்ன முட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்குஅருட்பணி பேரவை துணைத்த லைவர்அ ந்தோணி செப ஸ்தியான், செயலாளர்தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லி ன்மற்றும் பங்குஅருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள்கலந்து கொண்டனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கொடிஇறக்கம்மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர், பங்கு அருட்பணிபேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • 9-ம் திருவிழாவையொட்டி நடக்கிறது
    • இன்று இரவு நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது.

    இந்தஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத் தார். இந்த திருவிழா நாளை (9-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று மாலை நவநாள் திருப்பலி நடந்தது. கன்னியாகுமரி மறைவட்ட முதன்மை பணியாளர் ஜான்சன் தலைமையில் கே.எஸ்.எஸ்.எஸ். செயல் இயக்குனர் மைக்கேல் ராஜ் அருளுரை ஆற்றினார்.

    9-ம் திருவிழா வான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளி களுக்கான திருப்பலி நடந்தது. புதுக்கிராமம் பங்கு அருட்பணி யாளர் மைக்கேல் நியூமன் தலை மையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார்.

    இன்று மாலை 6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடக்கிறது. காரங்காடு பங்கு அருட்பணி யாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்ட ணம் பங்கு அருட் பணியாளர் பபி யான்ஸ் அருளுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு சப்பரப் பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடக்கி றது. பெங்களூரு அருட்பணி யாளர் மரியசெல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றுகிறார். காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்ன முட்டம் புனித தோமை யார் ஆலய பங்கு அருட்பணி யாளர் கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன், துணைச் செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

    • முஸ்லிம்கள் கடலில் குளித்து சிறப்பு தொழுகை
    • நேர்ச்சையும் செலுத்தினார்கள்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் கடற்கரையில் ஷேக் முகமது ஒலியுல்லா (முட்டத்தப்பா) தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஹிஜிரி ஆண்டும் ஸபர் மாதம் கடைசி புதன்கிழமை கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதே போல இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடைசி புதன்கிழமையான நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி மார்க்க அறிஞர்களின் கிராத் மற்றும் மௌலூது ஓதும் நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாலையில் கூட்டு பிரார்த்தனையும், நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த விழாவில் கன்னியா குமரி, நெல்லை மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்க ளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கடலில் குளித்து நேர்ச்சை செலுத்தினர். விழா ஏற்பாடு களை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    • மேற்கு கடற்கரையில் தடையால் மீன் விலை மேலும் உயர வாய்ப்பு
    • கடலுக்குள் ஏற்படும் சுழற்சியால் வலைகள் சிக்கிக்கொள்கின்றன

    கன்னியாகுமரி:

    61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால்அதிர்ச்சி தான் காத்திருந்தது.

    தற்போது நடுக்கடலு க்குள் ஏற்பட்ட சுழற்சி யின் காரணமாக கடலுக்குள் வீசப்படும் மீன் வலைகள் சுற்றி கயிறு போல் ஆகிவிட்டன. இதனால் பெரும்பாலான மீனவர்கள் வீசிய வலைகளில் மீன்கள் சிக்கவில்லை.

    எனவே குறைந்த அளவு மீன்களுடன் அவர்கள் கரைக்கு திரும்பி வருகின்றனர். மீன் வரத்து குறைந்ததால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    தடை காலத்தில்ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுறாமீன் தற்போதும் அதே விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் வஞ்சிரம் ரூ.350- க்கும், கருப்பு வாவல் ரூ.250- க்கும் , நண்டு ரூ.150- க்கும் ,ஊசி கணவாய் ரூ.200-க்கும், கொடுவா ரூ.250-க்கும், சங்கரா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விளமீன் ரூ.250- க்கும், கொச்சாம்பாறை ரூ250- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடலில் மீன்கள் அதிக மாக கிடைத்தபோது கன்னியாகுமரி சின்ன முட்டம் துறைமுகத்துக்கு தினமும் 5 முதல் 10 டன்கள் வரை மீன்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் 700 கிலோ முதல் 1 டன்வரை தான் மீன்கள் வருகின்றன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் கடலுக்குள் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது 1500 முதல் 2000 லிட்டர் டீசல், 50 ஐஸ்கட்டிகள், உணவு பொருட்கள் என ரூ.1 லட்சம் செலவாகிறது.

    ஆனால் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதால் முதலுக்கே மோசமாகிவிட்ட கதை யாகிவிட்து என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற ஜூலை மாதம் வரை நீடிப்பதால் மீன் விலை இன்னும் கிடுகிடு வென உயரும் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

    ×