search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித சந்தன மாதா ஆலய கொடியேற்றம்
    X

    புனித சந்தன மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    புனித சந்தன மாதா ஆலய கொடியேற்றம்

    • கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், சோழவித்யா புரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழா கொடியே ற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட அதிபர் பன்னீ ர்செல்வம் தலைமையில் ஜெபமாலை, மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதை தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.கொடியேற்ற நிகழ்வில் சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவர் மரியசூசை, சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் கிறிஸ்துவ சமூதா யத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×