search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்வு"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.இதில் குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி தனசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மூர்த்தி, மாவட்ட உரிமையியல் கோர்ட்மு நீதிபதி ராஜமகேஷ்வர், குற்றவியல் கோர்ட்மு நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதா ஆகியோர் கொண்ட 4 அமர்வானது கோர்ட்டுகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தியது.

    இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 502 வழக்குகள் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 300 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சங்க தலைவர் மணிவண்ணன், வக்கீல்கள் சங்கர், அருணன், திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:- 

    தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    • காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.

    இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    அப்போது, கால் உடைந்த நிலையில் காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் குறைகளை கேட்டறிந்தார்.

    இது பொதுமக்களின் மனதில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் மனித நேயத்தையும், பெருந்தன்மையையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் உள்ள இலஞ்சி மிக முக்கியமான சாலையாகும். இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குற்றாலம் வரும் பயணிகள் இந்த சாலையையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதான சாலையில் மிக முக்கியமான பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்தில் மண்ணை கொட்டி பராமரிப்பு வேலைகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இரவு நேரத்தில் அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை அருகே ெபாதுபாதை பிரச்சனையில் சுமூக தீர்வு காணபட்டது
    • கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்களுர், முல்லைநகர் அருகே உள்ள இடத்தை முஸ்லீம் சமூகத்தினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அந்த இடத்தை முல்லை நகர் மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பொதுபாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே பாதை பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி தலைமையில் சமாதான கூட்டம் நடைப்பெற்றது. அதில் இருதரப்பினரும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஏற்கனவே இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும், முஸ்லீம் தரப்பில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தடை செய்ய கூடாது, குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும் பொதுபாதையை பயன்படுத்துவதை யாரும் தடை செய்ய கூடாது, கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்திற்கு பெருங்களுர்ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், செந்தில், ஜெயராமன், சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாத்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை மக்கள் நீதிமன்றத்தில் 760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள்‌ என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

    குளித்தலை:

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றமம் நீதிபதிகள் சார்பு நீதிபதி சண்முககனி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, பாலமுருகன், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி தினேஷ்குமார், குற்றவியல் நடுவர் எண் 2 நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், இடப் பிரச்சனை தொடர்பான சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரசம் செய்ததில் 760 வழக்கு களுக்கு சம்பந்தப்ப ட்டவர்களிடம் சமரசம் பேசி தீர்வு காணப்பட்டு ரூ.5.63.70.551 தொகையாக முடிக்க ப்பட்டது.இதில் அரசு வழக்கறி ஞர்கள் சாகுல்ஹமீது, நீலமேகம் மற்றும் குழு வழக்கறிஞர் பாலசு ப்பிரமணியன், மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர் நிகில்அரவிந்த், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி டிவிசனல் மேனேஜர் ராஜேந்திரன், கிளை மேலாளர் பாலசு ப்ரமணியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.குளித்தலை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சண்முக கனி விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்கினார்,




    • அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 13ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட மூன்சிப் கோர்ட் நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவு, செந்தில்குமார், கற்பகவல்லி, ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி கணேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன், செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் முன்சீப் கோர்ட் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ்ஜெயகிருபா, அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 331 சிறு, குறு வழக்கு, 19 சிவில் வழக்கு, 4 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 1 காசோலை வழக்கு, 2 நுகர்வோர் கோர்ட் வழக்கு, 287 வங்கி வழக்கு, 2 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்கு, 6,538 போக்குவரத்து காவல்துறை விதி மீறிய வழக்கு மற்றும் 484 நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 13,184 வழக்குகளில் ரூ.4.80 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    • பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம், பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 154 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2,31,98,192 வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக காசோலை வழக்கில் ரூ.90,49,351வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 47 மனுக்களில், 29 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    தேசிய அளவில் நுகர்வோர் வழக்குகளை தீர்க்க சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள், நுகர்வோர் ஆணையங்களில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் விசாரிக்கப்பட்ட 2 புகார்களில், விற்கப்பட்ட பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலித்து உள்ளது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கூடுதலாக பெறப்பட்ட தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தருவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

    மற்றொரு வழக்கில் உற்பத்தி குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடைக்காரர் அதனை மாற்றி புதிய செல்போனை வழங்க மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு தீர்வு ஏற்பட்டது. சூரிய மின்சக்தி உபகரணத்தின் குறைபாடு ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அதனை வழங்கிய நிறுவனத்தினர் உபகரணத்தின் குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.

    மேலும் வீடு தீப்பற்றியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை கொடுக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று இரண்டு வார காலத்திற்குள் ரூ.5 லட்சத்தை புகார்தாரருக்கு வழங்க காப்பீட்டு நிறுவன மேலாளர், மக்கள் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.

    மேலும் சேவை குறைபாடு, கூடுதல் தொகை பெற்றது, நியாயமற்ற வணிக நடைமுறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் குறைபாடு தொடர்புடைய 55 நுகர்வோர் புகார்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக வீரம் லாவண்யா பங்கேற்றார். இதில் அரசு வக்கீல் கதிரவன் உள்ளிட்ட வக்கீல்களும், புகார்தாரர்களும், எதிர் தரப்பினரும் என பலர் கலந்து கொண்டனர்.

    ×