search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவனந்தபுரம்"

    • குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.
    • தெற்கு ரெயில்வே தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொல்லம் கோட்டயம்- ஏற்றுமானூர் மற்றும் எர்ணாகுளம்-திருச்சூர் ஆகிய பிரிவுகளில் ரெயில் நிலையங்களில் திட்ட மிடப்பட்டுள்ள பாதை பராமரிப்பு பணிகளுக்காக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவது திருவனந்தபுரம் சென்ட்ரலில் நிறுத்தப்படும். அதாவது திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் குருவாயூர் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) குருவாயூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து சேவையைத் தொடங்கும். அதா வது குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் (3 நாட்கள் காயங்குளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் செல்லாது. அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற் றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலம் தொட்டு திருவனந்தபுரத்தில் இருந்து குமரிமாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் திற்பரப்பு ஆகிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக 2 கேரளா பஸ் இயக்கப்பட்டு வந்தன. இது தம்பானுரில் இருந்து நெய்யாற்றின்கரை, பாற சாலை, களியக்காவிளை, மார்த்தாண்டம், திருவட் டார், குலசேகரம், வழி யாக திற்பரப்பு மற்றும் பேச்சிப்பாறைக்கு இயக் கப்பட்டது கொரோனா கால கட்டத்தில் நிறுத்தப் பட்டன.

    அதன் பின்பு கேரளா பஸ்கள் திருவனந்த புரத்தில் இருந்து தமிழக எல்லையான குமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவிலுக்கும் படி படியாக இயங்கியது. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கேரளா பஸ் திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களுக்கு இதுவரை இயக்கப்படவில்லை.

    மேலும் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான திற்பரப்பு பகுதிக்கு கேரளாவிலிருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு தினசரி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

    எனவே திருவனந்த புரத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த திற்பரப்பு, பேச்சிப் பாறை உள்ளிட்ட பகுதி களுக்கு கேரளா அரசு பஸ்சை அதே வழி தடத்தில் மீண்டும் திருவட்டார் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

    • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் முட்டை தரை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் 2 கால்கள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கு முகம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 2 கால்களையும் கைப்பற்றி உடல் பாகங்கள் எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர் பாக நாகர்கோவில் பட்டகா சாலியன் விளையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரை கொலை செய்து உடல்பாகங்களை திருவனந்தபுரம் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம், கோட்டார், போலீஸ் நிலை யங்களில் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    ரமேஷ் கொலை செய்ததாக கூறப்பட்ட அவரது நண்பர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். ரமேஷ் கூறிய அவரது நண்பர் கடந்த இரண்டு மாதங்களாக மாயமாய் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே கொலை செய் யப்பட்டது அவரது நண்பர் சின்னமுட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் (வயது 27) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரிடம் ரமேஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:-

    எனது தந்தை மணிகண்டன் கேரளாவில் வசித்து வருகிறார். என் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் என்னை வழக்கு தொடர்பாக தேடினால் உடனே நான் கேரளாவிற்கு சென்று விடுவேன். சின்ன முட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் எனது நண்பர் ஆவார். அவர் மீன்பிடிப்பதற்காக கேரளாவிற்கு வந்திருந்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன். பின்னர் கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். துணி யால் அவரது உடலை மூடி வைத்திருந்தேன். பின்னர் அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவர் உதவியுடன் பீட்டர் கனிஷ்கர் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசினேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இருப்பினும் போலீசார் கொலை செய்யப்பட்டது பீட்டர் கனிஷ்கர் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்டது யார் என்பது இறுதி முடிவு செய்யப்படும்.

    பீட்டர் கனிஷ்கர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    • ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் நவராத்திரி ஊர்வலம்
    • தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர்

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி தேவி, குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகியோர் ஊர்வலமாக சென்று பங்கேற்று திரும்பி வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அகில இந்திய பாரதிய ஜனதா செயலாளர் சி.டி. ரவி, கேரள பாரதிய ஜனதா பொருளாளர் நடிகர் சுரேஷ் கோபி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 23-ந் தேதி காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி வாகன பவனி தொடங்குகிறது.

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் தமிழ்நாட்டின் பத்மநாபபுரத்தில் இருந்து 3 சுவாமி விக்ரகமும், கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு ராஜ மரியாதையுடன் பவனி வரும் நவராத்திரி ஊர்வலம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி நடைபெறும்
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாறிய பின்னர் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இதற்காக நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்ம நாபபுரம் அரண்மனை யில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோ வில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள், வெள்ளிக்குதிரை வாகனம், யானை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருவனந்த புரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்வது வழக்கம். நவராத்திரி விழாவுக்கு பின் னர் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் எடுத்து வரப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கார ணமாக இந்த நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற வில்லை. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. செப்டம் பர் மாதம் 23-ந்தேதி காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி திருவ னந்தபுரம் புறப்பட உள் ளது.

    முதல் நாள் குழித்துறை யில் ஓய்வுக்குபின்னர் புறப்படும் பவனிக்கு, 24-ந் தேதி குமரி-கேரள எல்லை யான களியக்காவிளையில் வரவேற்பும் அளிக்கப்ப டுகிறது. அன்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ் ணன் கோயிலில் ஓய்வுக்கு பின்னர் 25-ந்தேதி காலை திருவனந்தபுரம் புறப்படும் பவனிக்கு நகர பகுதியில் நேமம் என்ற இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பவனி செல்லும் பாதை யில் எல்லாம் பக்தர்கள் வர வேற்பு அளிக்கவும், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்க வும் வாய்ப்பு வழங்கப்ப டும். அக்டோபர் 5-ந்தேதி சரஸ்வதி பூஜைக்கு பின்னர் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி காலை விக்ரகங் கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி புறப்படும். இரண்டு ஆண்டு இடை வெளிக்கு பின்னர் பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளிமலை குமாரசாமி வெள்ளிக்கு திரையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக் கிலும், சரஸ்வதி தேவி யானை மீதும் பவனியாக வலம் வருகின்றனர். சாலையின் இருபுறமும் நடைபெறுகின்ற தட்டம் பூஜை உள்ளிட்ட நிவேத்திய சமர்ப்பண நிகழ் வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி பவனி சம்பிரதாய முறையில் நடைபெற்றது. வழக்கமான கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பவனி நடைபெற உள்ளது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இது தொடர் பான ஆலோ சனை கூட்டம் திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கேரள மந்திரிகள் ராதாகிருஷ்ணன், அகம்மது மற்றும் குமரி-கேரள அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
    • இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.

    இதனை சரிசெய்ய அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடவிளாகம் குடிநீர் தேவைக்காக தோண்ட பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ள காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை தயார் செய்யும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    மேலும் திங்கள் நகர் ரவுண்டானா வில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் பெரிய அளவிலான பள்ளங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணிகள் தவறி விழுந்து செல்வதை காண முடிகிறது. தினசரி மாநில மந்திரி மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சாலையின் நிலை குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.


    உயிருக்கு உலை வைக்கும் சம்பவம் நிகழும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு திருவனந்தபுரத்திற்கு எளிதாக செல்லும் சாலையாகும்.
    • பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது

    கன்னியாகுமரி:

    அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலிருந்து மாலைக்கோடு வரையிலான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலைக்காக பல ஆண்டுகாலமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குமுறலுடன் இருக்கின்றனர்.

    இச்சாலையானது தமிழக அரசு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்தி ரிகளுக்கு கேரளாவுக்கு (திருவனந்த புரம்) எளிதாக செல்லும் சாலையாகும்.

    தற்போது பெய்துவரும் தொடர்மழையால் சாலையில் நீர் தேங்கி குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலையை காலம் கடத்தாமல் உடனடியாக சீர்செய்ய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகத்தையும் பொதுமக்களும் அரசிய கட்சியினரும் கேட்டு கொண்டுள்ளனர்.

    ×