search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மநாபபுரம்"

    • பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
    • பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டி ருந்தது. இதேபோல் பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த போர்டுகளை பத்மநாபபுரம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலையில் அகற்றி னர். இதை அறிந்த பாரதிய ஜனதா கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணித்தலை வர் குமாரதாஸ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் நகராட்சி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தி லும் ஈடுபட்டனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆணை யாளர் லெனின் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில்உடன்பாடு ஏற்படா ததால் கவுன்சிலர்கள் அலுவ லக அறைக்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் அருள் சோபன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாரத மாதா போர்டு போரா ட்டம் நடத்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அகற்ற ப்பட்ட இடத்திலேயே இர வில் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த இடத்தில் பாரதமாதா போர்டு மாயமாகி இருந்தது.

    இதுபற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் அந்த போர்டை மீண்டும் அகற்றியிருப்பதாக தெரியவந்தது. இதனால் பாரதிய ஜனதாவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வன ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்
    • குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப் பகுதிக்கு கொண்டு விட்டனர்.

    நாகர்கோவில்:

    பத்நாபபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறை ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    வேளிமலை வன சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.பின்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது.

    அந்த கூண்டில் ஒரே நேரத்தில் 45 குரங்குகள் சிக்கியது. நேற்று ஒரே நாளில் 45 குரங்குகள் சிக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 45 குரங்குகள் ஒரே இடத்தில் பிடிபட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    • நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி நடைபெறும்
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாறிய பின்னர் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இதற்காக நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்ம நாபபுரம் அரண்மனை யில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோ வில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள், வெள்ளிக்குதிரை வாகனம், யானை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருவனந்த புரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்வது வழக்கம். நவராத்திரி விழாவுக்கு பின் னர் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் எடுத்து வரப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கார ணமாக இந்த நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற வில்லை. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. செப்டம் பர் மாதம் 23-ந்தேதி காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி திருவ னந்தபுரம் புறப்பட உள் ளது.

    முதல் நாள் குழித்துறை யில் ஓய்வுக்குபின்னர் புறப்படும் பவனிக்கு, 24-ந் தேதி குமரி-கேரள எல்லை யான களியக்காவிளையில் வரவேற்பும் அளிக்கப்ப டுகிறது. அன்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ் ணன் கோயிலில் ஓய்வுக்கு பின்னர் 25-ந்தேதி காலை திருவனந்தபுரம் புறப்படும் பவனிக்கு நகர பகுதியில் நேமம் என்ற இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பவனி செல்லும் பாதை யில் எல்லாம் பக்தர்கள் வர வேற்பு அளிக்கவும், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்க வும் வாய்ப்பு வழங்கப்ப டும். அக்டோபர் 5-ந்தேதி சரஸ்வதி பூஜைக்கு பின்னர் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி காலை விக்ரகங் கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி புறப்படும். இரண்டு ஆண்டு இடை வெளிக்கு பின்னர் பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளிமலை குமாரசாமி வெள்ளிக்கு திரையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக் கிலும், சரஸ்வதி தேவி யானை மீதும் பவனியாக வலம் வருகின்றனர். சாலையின் இருபுறமும் நடைபெறுகின்ற தட்டம் பூஜை உள்ளிட்ட நிவேத்திய சமர்ப்பண நிகழ் வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி பவனி சம்பிரதாய முறையில் நடைபெற்றது. வழக்கமான கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பவனி நடைபெற உள்ளது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இது தொடர் பான ஆலோ சனை கூட்டம் திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கேரள மந்திரிகள் ராதாகிருஷ்ணன், அகம்மது மற்றும் குமரி-கேரள அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தேசிய பசுமைப்படை கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து 'ஒரே ஒரு பூமி' என்ற சிந்தனையில் புலியூர்குறிச்சி உயிரின பன்மய பூங்காவில் வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் வரவேற்றார்.

    சுற்றுச்சூழல் உறுதி மொழியை தக்கலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சோபா வாசித்தார். துண்டு பிரசுரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட அதை வன அலுவலர் பெற்றுக்கொண்டார்‌. தொடர்ந்து மஞ்சள் பைகளை அனைவருக்கும் வழங்கினார்.

    பின் இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் கிளாட்சன் நன்றி கூறினார்.

    ×