search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் தோட்டிகோடு புதுக்கடை சாலையை சீரமைக்க வேண்டும்
    X

    இரணியல் தோட்டிகோடு புதுக்கடை சாலையை சீரமைக்க வேண்டும்

    • நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
    • இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.

    இதனை சரிசெய்ய அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடவிளாகம் குடிநீர் தேவைக்காக தோண்ட பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ள காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை தயார் செய்யும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    மேலும் திங்கள் நகர் ரவுண்டானா வில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் பெரிய அளவிலான பள்ளங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணிகள் தவறி விழுந்து செல்வதை காண முடிகிறது. தினசரி மாநில மந்திரி மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சாலையின் நிலை குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.


    உயிருக்கு உலை வைக்கும் சம்பவம் நிகழும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×