என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திருவனந்தபுரம்-திற்பரப்புக்கு இயங்கிய கேரள பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலம் தொட்டு திருவனந்தபுரத்தில் இருந்து குமரிமாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் திற்பரப்பு ஆகிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக 2 கேரளா பஸ் இயக்கப்பட்டு வந்தன. இது தம்பானுரில் இருந்து நெய்யாற்றின்கரை, பாற சாலை, களியக்காவிளை, மார்த்தாண்டம், திருவட் டார், குலசேகரம், வழி யாக திற்பரப்பு மற்றும் பேச்சிப்பாறைக்கு இயக் கப்பட்டது கொரோனா கால கட்டத்தில் நிறுத்தப் பட்டன.
அதன் பின்பு கேரளா பஸ்கள் திருவனந்த புரத்தில் இருந்து தமிழக எல்லையான குமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவிலுக்கும் படி படியாக இயங்கியது. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கேரளா பஸ் திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களுக்கு இதுவரை இயக்கப்படவில்லை.
மேலும் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான திற்பரப்பு பகுதிக்கு கேரளாவிலிருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு தினசரி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
எனவே திருவனந்த புரத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த திற்பரப்பு, பேச்சிப் பாறை உள்ளிட்ட பகுதி களுக்கு கேரளா அரசு பஸ்சை அதே வழி தடத்தில் மீண்டும் திருவட்டார் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.






