என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 22-ந்தேதி புறப்பாடு
- ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் நவராத்திரி ஊர்வலம்
- தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர்
கன்னியாகுமரி:
திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி தேவி, குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகியோர் ஊர்வலமாக சென்று பங்கேற்று திரும்பி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அகில இந்திய பாரதிய ஜனதா செயலாளர் சி.டி. ரவி, கேரள பாரதிய ஜனதா பொருளாளர் நடிகர் சுரேஷ் கோபி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 23-ந் தேதி காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி வாகன பவனி தொடங்குகிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் தமிழ்நாட்டின் பத்மநாபபுரத்தில் இருந்து 3 சுவாமி விக்ரகமும், கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு ராஜ மரியாதையுடன் பவனி வரும் நவராத்திரி ஊர்வலம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






