search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க."

    • தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்த்தாண்டம், நவ.4-

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலூர் தேவா தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜெனோ, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெப ஜான், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், எஸ்.எம்.கான், மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கின்ற முகாம்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பூத் முகவர்களும் தங்களுடைய பூத்களில் சென்று பணி செய்வதென்றும், நலிவடைந்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.
    • மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தரை பகுதியில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புற நோயாளிகளாக பலரும் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.

    இதனால் மருத்துவரின் வேண்டுகோளை ஏற்று தன்னார்வலர்கள் மூலமாக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இது போன்ற காரியங்களை செய்து வருவதை மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

    • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் அசுரா நண்பர்கள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு அசுரா நண்பர்க ளின சமூக பணிகளை பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், ஆலங்குளம் அரிமா சங்கம் ஆதித்தன், முன்னாள் பேரூ ராட்சி துணை தலை வர் தங்கசெல்வம், சமூக ஆர்வலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய இளைஞர் அணி அரவிந்த் ராஜ் திலக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அய்யம்பெருமாள், ஓன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் அசோக், மாரியப்பன், சோனா மகேஷ், தொழிலதிபர் செல்வகுமார்,ராஜன், அசுரா நண்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், குறிப்பன்குளம் இளந்தளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.

    சுரண்டை:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கடையநல்லூர் நகராட்சி சேர்மனுமான மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் பிலிப் ராஜா, சுப்பையா பாண்டியன், சண்முகராஜ், முத்தரசு, ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜிக்கு சால்வை அணிவித்தனர்
    • அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் பாலப்பள்ளம் பேரூராட் சிக்குட்பட்ட குறும்பனை பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சால்வை அணிவித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பாலப்பள்ளம் பேரூர் செயலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • நாகர்கோவிலில் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. விழா வுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். கலெக்டர் ஸ்ரீதர் வர வேற்றார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 27 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாடே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.27 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர்.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14-ந் தேதியே அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு.

    இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்ப டும் என வாக்கு றுதிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

    எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தும் போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கப்படாத வர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடு பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல் பட்டு வருகிறோம்.

    மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் எனும் உயரிய எண்ண த்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்க இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பதியாகத்தான் தற்போது இங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் 25 ஆயிரம் பேருக்கு ரூ. 27 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியுள்ளோம்.

    பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞர் அதை செய்தார். கலைஞரை தொடர்ந்து முதல்-அமைச்சரும் மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

    பெண்கள் முன்னேற்றம் 3 வழிகளில் தடுக்கப்பட்டி ருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. 2, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது. 3, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது.

    இந்த 3 தடைகளை யும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்படும் என்று பெரியார் சொன்னார்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது.

    இவற்றை எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்று வதற்கான திராவிட மாடல் திட்டங்கள்.

    2-வதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது.

    ஆனால், கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்..இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தான்.அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன?

    ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்தி ற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை.

    இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டு மானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும். தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும்.

    நாட்டிலேயே முதல்முறையாக கலைஞர் 1989-ம் ஆண்டே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார். கலைஞர் வழியில், திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது.

    படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

    இதுவரை நமது அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களி லேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.

    இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்.

    பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ண னாக இருந்து முதல்-அமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்தி ருக்கிறார். உங்களுடைய மகனாக, – சகோதரனாக இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.

    பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்தி கள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா? பொய்யா? என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்ற வர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.

    இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கி றார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், –பேரூராட்சித் தலைவர், – மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், – ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவி களில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது திராவிட மாடல் அரசு.

    பெண்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டு கோளை வைக்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறி வுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.

    அப்போது தான் உங்க ளுக்கு பிறக்கும் குழந்தை களும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பா ர்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும்.

    ஆண்களை விட பெண்கள் தான் தங்களு டைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.

    எனவே, பொருளா தாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டு மொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.

    இங்கு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கும், – மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனு தவியை, முதல்-அமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. மாறாக சுய உதவிக் குழு சகோதரிகளின் உழைப்பிற்கான நம்பிக்கைத் தொகை யாகத் தான் பார்க்கிறார்கள்.

    தி.மு.க. அரசின் சாதனை களை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் தூதுவர்களாக மாறிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார். முடிவில் வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.விழாவில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக உள்ளனர்.

    சுரண்டை:

    சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

    புதிய வகுப்பறை

    மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய குழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பி ரமணியத்துரை வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மரக்கன்று நட்டு பேசினார்.அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று இஸ்ரோ மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், உயரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த மனிதநேயமிக்க மாண வர்களை உருவாக்கி யதும் இதே அரசு பள்ளி தான். முதல்-அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைத்து பள்ளி சிறப்பாக செயல்படும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாதேவி, உறுப்பி னர்கள் காசிநாதன், பாக்கிய ராஜ் ,சரஸ்வதி, ஹரிஹரன் ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சேர்ந்தமரம் கிளை தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதி வேச முருகேசன், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு,பிரேம் குமார் உட்பட பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியை மதுமதிவதனா நன்றி கூறினார்.

    • தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    • மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தர்மபுரி, தேனி, திருவாரூர், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை முடித்துக் கொண்டு குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

    இதனால் அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியை போன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இன்று கலந்து கொண்ட நூலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், சுரேந்திரகுமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என் சங்கர், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவபெரு மான், அழகியபாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன், தி.மு.க. இளைஞரணி தோவாளை ஒன்றிய துணை அமைப்பாளர் எட்பெர்க், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வக்கீல் சிவராஜ், டாக்டர் சபி, மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மருத்து வரணி நிர்வாகிகள் டாக்டர் வள்ளுவன், டாக்டர் சுரேஷ் பிள்ளை, டாக்டர் சுதாகர், டாக்டர் கிங்ஸ்லி செல்வக்குமார், பெர்லிங்ஸ்டன், பிரவின், ரஞ்சித் சிங், மாவட்ட அயலக அணி தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், முன்னாள் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய செய லாளர் பாபு, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஆன்றனி ராஜ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பத்மநாபபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூ ராட்சி தலைவர் நசீர், அனுகிரஹா தொண்டு நிறுவன நிறுவனர் சதீஷ் குமார்

    ×