search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×