என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
- தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது
நாகர்கோவில் :
தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தர்மபுரி, தேனி, திருவாரூர், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை முடித்துக் கொண்டு குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
இதனால் அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியை போன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இன்று கலந்து கொண்ட நூலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், சுரேந்திரகுமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என் சங்கர், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவபெரு மான், அழகியபாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன், தி.மு.க. இளைஞரணி தோவாளை ஒன்றிய துணை அமைப்பாளர் எட்பெர்க், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வக்கீல் சிவராஜ், டாக்டர் சபி, மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மருத்து வரணி நிர்வாகிகள் டாக்டர் வள்ளுவன், டாக்டர் சுரேஷ் பிள்ளை, டாக்டர் சுதாகர், டாக்டர் கிங்ஸ்லி செல்வக்குமார், பெர்லிங்ஸ்டன், பிரவின், ரஞ்சித் சிங், மாவட்ட அயலக அணி தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், முன்னாள் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய செய லாளர் பாபு, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஆன்றனி ராஜ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பத்மநாபபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூ ராட்சி தலைவர் நசீர், அனுகிரஹா தொண்டு நிறுவன நிறுவனர் சதீஷ் குமார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்