search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
    X

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    • கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்த்தாண்டம், நவ.4-

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலூர் தேவா தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜெனோ, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெப ஜான், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், எஸ்.எம்.கான், மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கின்ற முகாம்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பூத் முகவர்களும் தங்களுடைய பூத்களில் சென்று பணி செய்வதென்றும், நலிவடைந்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×