search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு"

    • அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.

    டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது.
    • இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நங்கவள்ளி:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4 நாட்களாக பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து 18 ஆயிரத்து 58 கன அடியாக அதிகரித்தது.

    தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நா டக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. அதாவது கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கன அடியாக குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக உள்ள தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 65.53 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.63 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி.யாக உளளது.

    • 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும்.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    முதலில் வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தேவைக்கேற்ப அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் பெய்யாததால் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்மட்டம் குறைந்து வருவதால் அணைக்குள் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வறண்டு காணப்படுகிறது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 2ஆயிரத்து 487 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு நேற்றிரவு திறக்கப்பட்டது.

    பொதுவாக பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும். தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் ஆங்காங்கே வறட்சியின் காரணமாக பாளம், பாளமாக நிலம் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வர 6 மணிநேரம் ஆகும். எனவே புதன்கிழமை அதிகாலைக்குள் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு

    தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லகுமார் ஆகியோர் ஏரியின் மதகை திறந்து வைத்தனர். பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து சென்றன. இதைத்தொடர்ந்து கலெக்டர் சரயு கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறந்து வைத்தார்.

    120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பாரூர், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பென்டரஅள்ளி, தாதம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் காளிபிரியன், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகானந்தம், பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஷெட்டரஅள்ளி நாகராஜ், டேம் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை திங்கட்கிழமை (3ம் தேதி) பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
    • 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை திங்கட்கிழமை (3ம் தேதி) பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்களில் திறந்துவிடப்படும் தண்ணீரால், பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இதே போல் பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கில்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அதன்படி, நாளை திறக்கப்படும் தண்ணீரால் மாவட்டத்தில் மொத்தம் 11,409.42 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.

    • மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    • இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கு கிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை பாசனத்துக்கு

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர்

    அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்க ளில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    19-வது முறையாக

    இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்க ளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட

    வைகளை தூர்வா

    ரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ந் தேதியான நாளை(திங்கட்கிழமை) அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவ

    சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சராசரி

    யாக டெல்டா மாவட்டங்க ளில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கைக்கொடுத்ததாலும், கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.நடப்பாண்டிலும், இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன. மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையில், 103.48 அடி நீர் மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சராக பெறுப்பேற்ற பின், ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை, மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.இதன் மூலம், 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக, விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 6857 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 265 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இதில் 693மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக வீணாவதை தடுக்கும் வகையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2173 மி.கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 2268 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த அளவில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7768 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 6875மி.கன அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இப்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    நாகர்கோவில், ஜூன்.3-

    கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 61 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 211 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானலுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.

    இந்த தண்ணீர் தோவாளை மற்றும் அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களில் திறந்து விடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.66 அடியாக இருந்தது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 61 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும் மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    உடுமலை  :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
    • இடது, வலதுபுற கால்வாய்களில் சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு தண்ணீரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது.

    அதன்படி அணையின் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக அதிகாரப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.

    இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனையடுத்து இடது, வலதுபுற கால்வாய்களில் சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு தண்ணீரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது. இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    ×