search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொயோட்டா"

    • லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
    • லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த இரண்டு லேன்ட் குரூயிசர் எஸ்யுவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வட அமெரிக்க சந்தையில் லேன்ட் குரூயிசர் 250 மற்றும் லேன்ட் குரூயிசர் 70 என்று அழைக்கப்படுகின்றன. லேன்ட் குரூயிசர் 250 மாடல் லேன்ட் குரூயிசர் பிராடோ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    முற்றிலும் புதிய லேன்ட் குரூயிசர் 250 மாடல் மூலம் வட அமெரிக்க சந்தையில் மீண்டும் லேன்ட் குரூயிசர் பிரான்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

     

    ஐரோப்பா, ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் புதிய லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் எஸ்யுவி மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.

    லேன்ட் குரூயிசர் 250 மாடலில் 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் லெக்சஸ் GX 470 மற்றும் அதிக டொயோட்டா மற்றும் லெக்சஸ் கார்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. லேன்ட் குரூயிசர் 70 மாடலில் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய லேன்ட் குரூயிசர் கார்களில், லேன்ட் குரூயிசர் பிராடோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் பார்ச்சூனரின் மேல், லேன்ட் குரூயிசர் 300 எஸ்யுவி மாடல்களின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    • டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் ஐந்து நிறங்கள், மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இதன் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த கார் ஐந்து விதமான நிறங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலின் டாப் என்ட் ZX வேரியன்ட் விலை ரூ. 37 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு காரணமாக இந்த வேரியன்டின் விலை ரூ. 26 லட்சத்து 05 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. இதே போன்று VX வேரியன்டின் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் வேரியன்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் அதிகரித்து உள்ளது.

     

    இவைகளின் புதிய விலை முறையே ரூ. 24 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னோவா க்ரிஸ்டா மாடலின் என்ட்ரி லெவல் விலையில் மட்டும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சூப்பர் வைட், ஆட்டிட்யுட் மைக்கா பிளாக், பிளாட்டினம் வைட் பியல், அவான்ட்-கார்டெ பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் சில்வர் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் தான் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் ஆம்புலன்ஸ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    • வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
    • மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.

    ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     

    டாடா பன்ச் CNG:

    ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

     

    ஆடி Q8 இ டிரான்:

    ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா ருமியன்:

    டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    வால்வோ C40 ரிசார்ஜ்:

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் ஆகும்.
    • புதிய எம்பிவி மாடலின் என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பல்வேறு வாகனங்களை ரிபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் விட்டாரா பிரெஸ்ஸா - அர்பன் குரூயிசர், பலேனோ - கிளான்சா, கிரான்ட் விட்டாரா - அர்பன் குரூயிசர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் - இன்விக்டோ போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    இந்திய சந்தையில் டொயோட்டா விற்பனை செய்து வரும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் துவங்குகின்றன. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ருமியன் மாடலின் விலை ரூ. 8.8 லட்சத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் ருமியன் பெயரை பயன்படுத்துவதற்காக டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே காப்புரிமை பெற்றுவிட்டது.

    தென் ஆப்பிரிக்கா மாடலில் உள்ளதை போன்றே புதிய ருமியன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இதன் முன்புற தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படலாம். என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம். இது 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிதாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் மாருதி சுசுகி எர்டிகா மாடலை போன்றே இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx-இன் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் புதிய டொயோட்டா கார் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

     

    டொயோட்டா நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுசுகி Fronx மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் எர்டிகா மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களும் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செயய்யப்படுகிறது. புதிய Fronx மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கார் பிரெஸ்ஸா கம்பேக்ட் எஸ்யுவி மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    புதிய மாருதி சுசுகி Fronx மாடல் பிரீமியம் ஹேச்பேக் பலேனோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்ப்பட்டு, குறைந்த எடை கொண்ட ஹார்டெக்ட் பிளாட்பார்ம் வழங்கப்படுகிறது. இதன் டொயோட்டா வெர்ஷனும் இதே ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
    • 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை பார்ச்சூனர் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து, புதிய பார்ச்சூனர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    புதிய 7 சீட்டர் எஸ்யுவி பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 2024 பார்ச்சூனரின் முற்றிலும் புதிய டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

    அதன்படி இந்த காரின் முன்புறம் ஹெக்சகோன் வடிவம் கொண்ட கிரில் பகுதி, மூன்றடுக்கு க்ரோம் கிலில் ஸ்லாட்கள், நடுவில் டொயோட்டா பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்இடி டிஆர்எல்கள், பம்ப்பரில் அகலமான ஏர் இன்டேக், ஸ்கிட் பிலேட் காணப்படுகிறது.

    பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், உயரமான பில்லர்கள், பின்புறத்தில் முற்றிலும் புதிய ராப்-அரவுன்ட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. புதிய தலைமுறை பார்ச்சூனர் மற்றும் ஹிலக்ஸ் மாடல்கள் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகின்றன. இதே பிளாட்பார்மில் ஏற்கனவே டுன்ட்ரா, லேன்ட் குரூயிசர் மற்றும் லெக்சஸ் LX போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இவைதவிர புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் தற்போது வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் GD சீரிஸ், நான்கு சிலின்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த யூனிட் முதற்கட்டமாக ஹிலக்ஸ் மாடலில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இதில் 48 வோல்ட் பேட்டரி மற்றும் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் வழங்கப்படலாம்.

    • டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
    • ஹிலக்ஸ் டாப் எண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று துவங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனைக்கு வந்தது.

    ஹிலக்ஸ் மாடல் இதுவரை சுமார் 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அறிமுகத்தின் போது டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பிறகு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    என்ட்ரி லெவல் மாடல்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடுகிறது.

    டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஹிலக்ஸ் மாடலில் ஏழு ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    • புதிய தலைமுறை பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
    • டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமும் செய்ய இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இவை 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் அதே வேளையில், டொயோட்டா நிறுவனம் தனது லித்தியம் நிக்கல் கோபால்ட் மங்கனீசு (NCM) பேட்டரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை பேட்டரி பேக்குகள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி இவை தற்போதைய பேட்டரிகளை விட கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பேக் அதிக திறன் வெளிப்படுத்துவதோடு, bZ4X மாடலில் உள்ளதை விட மேம்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

    புதிய தலைமுறை NCM பேட்டரிகள் தவிர, டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பைபோலார் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இவை எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் ரேன்ஜ்-ஐ 20 சதவீதம் அதிகப்படுத்துவதோடு, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களை விட 40 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று டொயோட்டா நிறுவனம் கருதுகிறது. 

    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.

    டொயோட்டா நிறுவனம் பல்வேறு விலை பிரிவுகளில், ஏராளமான மாடல்களை விற்பனை செய்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் வழக்கமான டொயோட்டா பிரான்டு, லெக்சஸ் பிரீமியம் பிரான்டு, சீன மற்றும் வட அமெரிக்க சந்தைக்கென முற்றிலும் புதிய கிரவுன் பிரான்டு என டொயோட்டா நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு பிரான்டிங்கில் பலதரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    எனினும், அல்ட்ரா டாப் என்ட் வாகனங்கள் பிரிவில் டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. தற்போது வரை செஞ்சுரி பிரான்டு ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     

    மேலும் இந்த பிரான்டில் ஒரே மாடல் மட்டுமே உள்ளது. தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி மாடல்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் பென்ட்லி பென்ட்யகா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    செஞ்சுரி மாடலின் இன்டீரியர்கள் மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி வாகனங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஆடம்பர சவுகரிய அனுபவத்தை வழங்கி வருகின்றன. இதன் காரணமாகவே டொயோட்டா செஞ்சுரி மாடல் ஜப்பான் மன்னர், அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கிறது.

     

    முதல் முறையாக டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு எஸ்யுவி மாடலை உருவாக்குகிறது. மேலும் முதல் முறையாக செஞ்சுரி மாடல் ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா செஞ்சுரி மாடல் வட அமெரிக்க ஹைலேன்டர் மோனோக் எஸ்யுவி வடிவில் உருவாக்கப்படுகிறது.

    அதன்படி இந்த எஸ்யுவி எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த கார் தோற்றத்தில் 3-பாக்ஸ் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினனை விட சிறப்பான ஆடம்பர எஸ்யுவி-ஆக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடலில் 5.0 லிட்டர் ஹைப்ரிட் வி8 என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 425 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 3-rd Gen டொயோட்டா செஞ்சுரி செடான் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Photo Courtesy: CarScoops 

    • புதிய வெல்ஃபயர் மாடல் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
    • வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெல்ஃபயர் மாடலின் முதற்கட்ட புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன. முன்னதாக இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இவை வெளியாகி உள்ளன. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் லெக்சஸ் LM350h எம்பிவி மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக ஜப்பானில் விற்பனைக்கு வரும் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் அதன் பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும். அடுத்த தலைமுறை வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. புதிய மாடல் பாக்சி ஸ்டைலிங், தற்போதைய மாடலை விட நீளமாக உள்ளது.

    புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ஒட்டுமொத்த விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் ஆகும்.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் மே மாத விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்த டொயோட்டா வாகனங்கள் விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்று அசத்தியுள்ளது.

    மே 2023 மாதத்தில் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 4 ஆயிரத்து 786 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வருடாந்திர விற்பனை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 2 ஆயிரத்து 737 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்டா பெற்று இருக்கிறது.

     

    கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான கிளான்சா மாடலை விட இன்னோவா க்ரிஸ்டா 393 யூனிட்களே குறைவாக விற்பனையாகி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பழைய மாடல் என்ற வகையிலும் இன்னோவா க்ரிஸ்டா, புதிய எம்பிவி-யான ஹைகிராஸ்-ஐ விற்பனையில் முந்தியுள்ளது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 145 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

    இந்த என்ஜின் 184.8 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் மாடலில், eCVT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 29 லடச்த்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என இருவித வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் G-Slf, GX, VX ஹைப்ரிட், VX(O) ஹைப்ரிட், ZX ஹைப்ரிட் மற்றும் ZX(O) ஹைப்ரிட் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் அதிக பிரபலமடைந்த இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி-யின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை வாங்குவோர் அதன் ஹைப்ரிட் வெர்ஷன்களை டெலிவரி எடுக்க 100 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களை பெற முன்பதிவு செய்ததில் இருந்து 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை சார்ந்து புதிய எம்பிவி மாடலை உருவாக்கி இருக்கிறது. மாருதி சுசுகி எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது. விலை மற்றும் வினியோக விவரங்கள் ஜூலை 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    ×