search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் வார்னர்"

    • நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம்.
    • சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும் என்று ஜான்சன் கூறினார்.

    ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்.

    குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா? அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரா.

    என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    மும்பை:

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-

    மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா

    • கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
    • இந்திய மிகத்தீவிரமாக இந்த தொடரை நடத்தியது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முற்றிலும் நம்பமுடியாத உலகக் கோப்பையை நடத்தியதற்காக இந்தியாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தொடர்களில் எடுக்கப்பட்ட முயற்சி மிகப்பெரியது. இந்த தொடருக்கு பின்னால் மிகவும் சிறப்பாக செயல்பட்ட மைதான ஊழியர்கள், டிரஸ்ஸிங் ரூம்களில் இருப்பவர்கள், சமையல்காரர்கள், ஹோட்டல் ஊழியர்கள், போலீஸ், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், என சொல்லி கொண்டே போகலாம்.

    இங்குள்ள ரசிகர் சூழல் நம்ப முடியாத அளவில் இருந்தது. உங்கள் பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது. நீங்கள் இல்லாமல் நாங்கள் அனைவரும் விரும்பும் விளையாட்டை விளையாட முடியாது. கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

    இவ்வாறு வார்னர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக , வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூறிய அவர், தனது குழந்தைகளும் தீபாவளி வாழ்த்து கூறுவதை பதிவிட்டுள்ளார்.

    • முதல் விக்கெட்டுக்கு குசல் பெரேரா மற்றும் நிசங்கா ஜோடி 125 ரன்கள் குவித்தது.
    • இலங்கை 32 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. முதல் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் விக்கெட்டுக்கு குசல் பெரேரா மற்றும் நிசங்கா ஜோடி 125 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இலங்கை 32 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. மழை நீர் மைதானத்தில் படாமல் இருக்க ஊழியர்கள் பெரிய கவரை எடுத்து வந்தனர். அப்போது அவர்களுக்கு உதவியாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அவர்களுடன் சேர்ந்து அந்த கவரை எடுக்க உதவினார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்திய திரைப்பட கதாபாத்திரத்தில் சில ஸ்டைல்களை செய்து வருவதுண்டு. முக்கியமாக புஷ்பா ஸ்டைலை அடிக்கடி செய்து காட்டுவார். வார்னர் மைதானத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இந்தியர்களின் மனதை கவர்ந்துள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



    • 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

    ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

    லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.



    • இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
    • தென்ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்கம் 102 ரன்களையும், துவக்க வீரர் டி காக் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

    பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அவுட் ஆன விதம் அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவர் 78 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் ஓடும்போது தனது காலில் இருந்த ஷூ நழுவியதால் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எதிர் முனையில் உள்ள கிரீசை தொட முடியாமல் ரன் அவுட்டாகி பரிதாபமான முறையில் வெளியேறினார்.

    இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    அவர் ஆட்டமிழந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இறுதியில் தோல்வியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.
    • கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    நேற்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    இந்த வெற்றிக்கு கிரிக்கெட் வீரர்கள் சினிமா பிரபலங்கள் என வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இது மிகப்பெரிய விஷயம். வெல்டன் இந்தியா என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்தியா மீதான அன்பை டேவிட் வார்னர் வெளிப்படுத்தி உள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின் போது ஜடேஜா போன்று பேட்டை சுழற்றி காட்டியது வைரலானது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் சினிமா குறித்த சில வீடியோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக புஸ்பா போன்று விளையாட்டு களத்தில் செய்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டர்வர் என்றே கூறலாம்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதல் ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் பவுண்டரி விளாசினார்.

    ஹெட்டிங்லே:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்- கவாஜா களமிறங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய வார்னர் 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இதுவரை 103 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 8,158 ரன்கள் சேர்த்துள்ளார். 36 வயதான வார்னர் கடைசி 4 இன்னிங்சில் 10, 1, 10, 15 ரன் வீதம் எடுத்து சொதப்பினார். அதனால் அவர் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்தால் தான் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறார்.

    இந்த நிலையில் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், '2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.

    டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.

    இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.

    ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன். இது தான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இந்த அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், 50 ஓவர் உலக கோப்பை போட்டி என்று அடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்' என்றார்.

    வார்னர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அளித்த பேட்டியில், 'கடந்த சில தினங்களாக வார்னரின் பேட்டிங் பயிற்சியை பார்க்கிறேன். பயிற்சியில் மிகச்சிறந்த நிலையில் அவர் இருப்பது போல் தெரிகிறது. அதனால் போட்டியில் ரன் குவிப்பார் என்று நம்புகிறேன். இனி வார்னர் கதை அவ்வளவு தான் என்று விமர்சனங்கள் எழுந்த போது அவர் தனது 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததை பார்த்தோம். சிறந்த வீரரை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரிடம் இருந்து ரன்வேட்டையை எதிர்பார்க்கிறோம்' என்றார்.

    • டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
    • ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவர் பெரிய பங்களிப்பை வழங்குவார்.

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரிலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்டு நம்பிக்கை தெரிவித்தார்.

    வார்னர் குறித்து ஆன்ட்ரூ மெக்டோனல்டு கூறியதாவது:-

    டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் எதிர்வரும் தொடருக்கு அவரை அணியில் சேர்த்திருக்கிறோம். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவரது பெரிய பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறோம்.

    அவர் இரண்டு தொடர்களுக்குமே முக்கியமான பிளேயர் ஆவார். அவரை சேர்க்காமல் இருந்திருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு ஆஷஸ் தொடருக்கு நாங்கள் திறமையான வீரர் தேட வேண்டியது இருந்திருக்கும்.

    ஆனால், அதுபோன்ற நடைபெறவில்லை. அவரையே தேர்ந்தெடுத்து விட்டோம். முதல் 2 ஆஷஸ் தொடருக்கு நாங்கள் வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். வார்னரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.

    அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். நான் அவரிடம் சமீபத்தில் பேசினேன். அவர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

    இவ்வாறு மெக்டோனல்டு கூறினார்.

    ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சொந்த மண்ணில் 4-0 என்ற இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்து சாம்பியன் ஆனது.

    இந்த முறை இங்கிலாந்தில் ஆஷஸ் போட்டி அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாகவே உலக டென்ஸ்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிந்து விடும். அதுவும் இங்கிலாந்தில் தான் நடைபெறுகிறது.

    இப்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஒரு பகுதியினர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

    • டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
    • பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது.

    ஐபிஎல் தொடரின் மிகமுக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.

    குறிப்பாக டெல்லி அணியின் பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா விளாசியுள்ள முதல் அரைசதமாகும். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரித்வி ஷாவிற்கு மிகச்சிறந்த சீசனாக அமையும் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

    ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி இருந்து பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கியது. ஆனால் மனம்தளராத பிரித்வி ஷா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்.

    அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×