search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Johnson"

    • நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம்.
    • சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும் என்று ஜான்சன் கூறினார்.

    ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்.

    குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா? அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரா.

    என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார். #Santhanam
    சந்தானம் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு 2’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் சந்தானம்.

    அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தை சர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான மாஸ்ட்ரம், த பர்பெக்ட் கேர்ள், லவ் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் 
    நடிக்கிறார்.



    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×