என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்
- கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
- இந்திய மிகத்தீவிரமாக இந்த தொடரை நடத்தியது.
புதுடெல்லி:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முற்றிலும் நம்பமுடியாத உலகக் கோப்பையை நடத்தியதற்காக இந்தியாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தொடர்களில் எடுக்கப்பட்ட முயற்சி மிகப்பெரியது. இந்த தொடருக்கு பின்னால் மிகவும் சிறப்பாக செயல்பட்ட மைதான ஊழியர்கள், டிரஸ்ஸிங் ரூம்களில் இருப்பவர்கள், சமையல்காரர்கள், ஹோட்டல் ஊழியர்கள், போலீஸ், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், என சொல்லி கொண்டே போகலாம்.
இங்குள்ள ரசிகர் சூழல் நம்ப முடியாத அளவில் இருந்தது. உங்கள் பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது. நீங்கள் இல்லாமல் நாங்கள் அனைவரும் விரும்பும் விளையாட்டை விளையாட முடியாது. கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
இவ்வாறு வார்னர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்