search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் ஜான்சன்"

    • நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம்.
    • சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும் என்று ஜான்சன் கூறினார்.

    ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்.

    குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா? அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரா.

    என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    • யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் யூசுப்பைத் தள்ளி விட்டார்.

    ஜோத்பூர்:

    லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது.

    ஆட்டத்தின்போது, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

    அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இவர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×