search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெலன்ஸ்கி"

    • இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு.
    • ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 10 மாதத்துக்கு மேல் உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    போர் காரணமாக உக்ரைனில் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர். ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உணவு விடுதி நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலா சங்கர் என்பவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்.

    அவர் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு மருந்து பொருட்கள், ஹெல்மெட்கள், வெப்ப உடைகள், ஷூக்கள், குண்டுகள் துளைக்காத உடைகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றை அங்குள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்று சேர்த்து வருகிறார்.

    போர் மேகம் சூழ்ந்துள்ள சாலைகளில் அவர் பயணம் செய்து ராணவத்தினருக்கு உதவிகள் செய்கிறார்.

    இது தொடர்பாக பாலா சங்கர் கூறும்போது, 'எனக்கு வாழ்க்கை தந்த நாட்டை இக்கட்டான காலத்தில் கைவிடமுடியாது. இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு. நான் என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறேன்' என்றார்.

    போர் ஆரம்பித்த கால கட்டத்தில் பாலா சங்கர் தனது உணவு விடுதி மூலம் பலருக்கு உணவு வழங்கி உதவி செய்தார். பாலா சங்கரின் இந்த ஆபத்தான சேவையை அவரது குடும்பத்தினர் நினைத்து அச்சத்தில்ல் உள்ளனர். எனினும் பாலாசங்கர் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

    அவரது சகோதரர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டனர். மனைவி மற்றும் மகன் போலந்து நாட்டிற்கு இடம்மாறி உள்ளனர். பாலா சங்கர் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவமாணவராக உக்ரைன் நாட்டுக்கு சென்று இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா இணைந்த இணைந்த பிறகு இது அவருக்கு 2-வது போர் ஆகும். படிப்பை முடித்த பிறகு பாலா சங்கர் உக்ரைன் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றார். மேலும் உணவகத்தை தொடங்கி நடத்தினார்.

    கடந்த 2015-ம் ஆண்டு அவர் கார்கிவ் தமிழ்ச்சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு இதனை தனது மகன் மாறன் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
    • ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதமாக நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த போரால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரஷியா அறிவித்த 36 மணி நேர போர் நிறுத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

    இதைதொடர்ந்து மீண்டும் ரஷியா தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. உக்ரைன் வீரர்களும் அவர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

    உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

    உக்ரைன் வீரர்களின் தற்காலிக ராணுவதளத்தின் மீது அடுத்தடுத்த ராக்கெட்டுகளை வீசினார்கள். இதில் ராணுவமுகாம் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ரஷியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு 600 உக்ரைன் வீரர்கள் இறந்ததாக ரஷியா தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கிராம டோர்லக் மேயர் தெரிவித்து உள்ளார்.

    ஒரு புறம் இருநாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து வந்தாலும் மறுபுறம் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் பணியும் நடந்து வருகிறது. உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷிய வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் ரஷிய படைகளிடம் சிக்கிய 50 உக்ரைன் வீரர்களையும் அந்த நாடு விடுவித்து இருக்கிறது. இதுவரை 36 முறை கைதிகள் பரிமாற்றம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது.
    • உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷியா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷியா வெளியிட்டுள்ளது.

    ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது.

    உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.
    • புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர்.

    இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா தொடர்ந்து நடத்திவரும் மும்முனை தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.

    பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷியபடைகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் மின் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஏவுகணை வீச்சில் சேதவிவரம், உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.

    அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.

    இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

    புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

    இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

    அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.

    இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்.
    • மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

    ரஷிய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே உக்ரைனிடம் ரஷிய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

    பின்பற்ற மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகளுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் புதினின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உக்ரைனிடம் ரஷிய வீரர்கள் சரண் அடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவ்வாறு சரண் அடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று ரஷிய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்

    • உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது.
    • உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷியா கடும் கோபத்தில் உள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் படையினரும் அசராமல் போரிட்டு வருவதால் போர் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் தற்போது அந்த நகரங்கள் ஒவ்வொன்றாக உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் உக்ரைனை பிடிக்கும் ரஷியாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷியா கடும் கோபத்தில் உள்ளது. இந்தநிலையில் உக்ரைனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 லட்சம் வீரர்களை உடனே பணிக்கு திரும்பு மாறு ரஷியா அறிவித்து உள்ளது.

    இந்த உத்தரவு பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடந்த 2 நாட்களாக வீதிகளில் இறங்கி பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட னர்.

    இதையடுத்து போராட்டம் நடத்திய 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த புதிய உத்தரவால் பீதியடைந்த முன்னாள் படை வீரர்கள் நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்து விமான நிலையங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது.

    இது பற்றி அறிந்த ரஷிய அரசு 18 வயது முதல் 65 வயதுடையவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து உள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட் வழங்க கூடாது என விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் உக்ரைன் போரில் 55 ஆயிரம் ரஷிய வீரர்கள் இறந்து உள்ளனர். உக்ரைனில் நடக்கும் இந்த குற்றம், கொலைகள் மற்றும் சித்ரவதைக்கு நீங்கள் உடந்தையாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் இது போன்று நடக்கிறது.

    இந்த போரால் ரஷியாவை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள், மகன்கள், பேரக்குழந்தைகளை இழந்து தவிக்கிறார்கள். ஒரு மனிதருக்காக (புதின்) இந்த போர் நடந்து வருகிறது. இப்போது தான் உங்களுக்கு சரியான நேரம் கிடைத்து இருக்கிறது. ரஷியாமக்கள் வாழ்வா? சாவா? என்பதை தேர்ந்தெடுத்து எதிர்த்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உக்ரைனை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.
    • ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும்.

    நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு இடம் பெயர்ந்தனர். போர் மூலம் உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் அழித்தன. உக்ரைனுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம்.

    எங்கள் பிரதேசத்தை திருட ரஷியா முயற்சித்ததற்காக உக்ரைன் தண்டனையை கோருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்காகவும், உக்ரைன் பெண்களை சித்திரவதை செய்தது மற்றும் அவமான படுத்தியதற்காகவும் தண்டனை வழங்க வேண்டும். எங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
    • இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

    இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார். 


    இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.

    ×