என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
உக்ரைன் மக்களை கொன்ற ரஷியாவிற்கு தண்டனை வழங்க வேண்டும்- ஐ.நா.கூட்டத்தில் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
- உக்ரைனை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.
- ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைனில் நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு இடம் பெயர்ந்தனர். போர் மூலம் உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் அழித்தன. உக்ரைனுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம்.
எங்கள் பிரதேசத்தை திருட ரஷியா முயற்சித்ததற்காக உக்ரைன் தண்டனையை கோருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்காகவும், உக்ரைன் பெண்களை சித்திரவதை செய்தது மற்றும் அவமான படுத்தியதற்காகவும் தண்டனை வழங்க வேண்டும். எங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்