search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia war"

    • உக்ரைனை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.
    • ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும்.

    நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு இடம் பெயர்ந்தனர். போர் மூலம் உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் அழித்தன. உக்ரைனுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம்.

    எங்கள் பிரதேசத்தை திருட ரஷியா முயற்சித்ததற்காக உக்ரைன் தண்டனையை கோருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்காகவும், உக்ரைன் பெண்களை சித்திரவதை செய்தது மற்றும் அவமான படுத்தியதற்காகவும் தண்டனை வழங்க வேண்டும். எங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×